தொண்டாமுத்தூர் – புதூர் சாலை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரிடமிருந்த 1.2-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை தொண்டாமுத்தூரில் கஞ்சா விற்ற இளைஞரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை தொண்டாமுத்தூர் – புதூர் சாலை, பார்பர் காலனி அருகே இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக தொண்டாமுத்தூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் தலைமையில் சென்ற போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனையிட்ட போது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட இளைஞர் அதே பகுதியை சேர்ந்த சின்னராஜ் என்பவரது மகன் விஜய் (26) என்பதும், அப்பகுதி இளைஞர்களுக்கு விற்பனை செய்த கஞ்சாவுடன் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர், மேலும் அவரைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை தொண்டாமுத்தூர் – புதூர் சாலை, பார்பர் காலனி அருகே இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக தொண்டாமுத்தூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் தலைமையில் சென்ற போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனையிட்ட போது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட இளைஞர் அதே பகுதியை சேர்ந்த சின்னராஜ் என்பவரது மகன் விஜய் (26) என்பதும், அப்பகுதி இளைஞர்களுக்கு விற்பனை செய்த கஞ்சாவுடன் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர், மேலும் அவரைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.