கோவை தொண்டாமுத்தூரில் கஞ்சா விற்ற இளைஞர் கைது – 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்..!

தொண்டாமுத்தூர் – புதூர் சாலை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரிடமிருந்த 1.2-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூரில் கஞ்சா விற்ற இளைஞரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் – புதூர் சாலை, பார்பர் காலனி அருகே இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக தொண்டாமுத்தூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் தலைமையில் சென்ற போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனையிட்ட போது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட இளைஞர் அதே பகுதியை சேர்ந்த சின்னராஜ் என்பவரது மகன் விஜய் (26) என்பதும், அப்பகுதி இளைஞர்களுக்கு விற்பனை செய்த கஞ்சாவுடன் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர், மேலும் அவரைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...