குளங்களில் டீசல் படகுகள் இயக்கினால் மீன்கள் உயிரிழக்க கூடும்: கோவை வட்ட மீனவர்கள் எம்.எல். ஏ வானதி சீனிவாசனிடம் மனு.

குளங்களில் டீசல் படகுகள் விடுவதால், டீசல் வாடை மற்றும் டீசல் கசிவால், குளத்தில் உள்ள மீன்கள் மற்றும் அங்குள்ள பல்வேறு நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். இதனால், குளங்களில் டீசல், பெட்ரோல் படகுகள் விடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


கோவை: உக்கடம் பெரிய குளம் வாலாங்குளங்களில் டீசல் படகுகள் அனுமதிக்கப்பட்டால், மீன்கள் உயிரிழக்க கூடும் என்பதால் டீசல் படகுகள் இயக்க அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி, கோவை வட்ட மீனவர்கள், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனிடம் மனு அளித்துள்ளனர்.



அவர்கள் அளித்த மனுவில் கூறியதாவது:கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம் மற்றும்வாலாங்குளம் ஆகிய இரு குளங்களிலும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு படகு இல்லம் வரவுள்ளது.

இந்த படகு நிலையத்தில், பெடல் படகுகள் மட்டுமே இயக்கப்படும் என்று நாங்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், தற்போது டீசல் படகுகள் விடுவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குளங்களில் டீசல் படகுகள் விடுவதால்,டீசல் வாடை மற்றும் டீசல் கசிவால், குளத்தில் உள்ள மீன்கள் மற்றும் அங்குள்ள பல்வேறு நீர்வாழ் உயிரினங்களுக்குஆபத்து ஏற்படும். இதனால், குளங்களில் டீசல், பெட்ரோல் படகுகள் விடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், டீசல் படகுகள் இயக்கினால், குளங்களில் மீன் பிடிக்க டெண்டர் எடுத்துள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும், என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை பெற்று கொண்ட தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அவர்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

நேற்றைய தினம் வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து புகார் எழுந்தால் மாநில மத்திய அரசுகளிடம்பேசுவதாக கூறியிருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...