தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திற்கு முன்னாள்‌ மாணவர்கள்‌ ரூ.5 லட்சம் வழங்கினர்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் விழாவில் ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் அ‌றக்கட்டளை நிறுவ ரூ.5 லட்சத்தை முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ 1978-81 ம்‌ ஆண்டு, வேளாண்மை மற்றும்‌ தோட்டக்கலை பட்டப்‌ படிப்பு முடித்து, 30.07.21 அன்று பட்டம்‌ பெற்று 41 ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, அந்த மாணவர்கள்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள பாரம்பரியமிக்க' ஃபிரிமேன்‌' கூடத்தில்‌ ஒன்று கூடி விழாவாக கொண்டாடினர்‌.

இந்த விழாவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர் முனைவர்‌ இவ. கீதாலட்சுமி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார், அவர் பழைய மாணவர்கள்‌ தங்கள்‌ கல்லூரிக்கால 'டேட்லர்‌' என்ற பத்திரிக்கையை தற்காலத்திற்கு தகுந்தவாறு மறு உருவாக்கம்‌ செய்தனர்‌.

இந்த டேட்‌லர்‌ ஒவ்டவொரு பழைய மாணவரின்‌ வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருந்தது.

இந்த 'டேட்லர்‌-2.0'வை வெளியிட்டார்‌. மாணவர்களின் இந்த முயறசியை துணைவேந்தர்‌ பெரிதும்‌ பாராட்டி பேசுகையில் பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்று வரும்‌ நடவடிக்கைகள்‌ குறித்தும்‌, அதில்‌ முன்னாள்‌ மாணவர்களின்‌ பங்கு பற்றியும்‌ விரிவாக எடுத்து கூறினார், மேலும் பல்கலைக்கழகம் மற்றும்‌ விவசாயிகளின்‌ முன்னேற்றத்திற்கு ஆற்ற வேண்டிய தொண்டுகள்‌ பற்றியும்‌ எடுத்துரைத்தார்கள்‌.

விழாவில் இந்த முன்னாள் மாணவர்கள்‌ தங்களுக்குள்‌ திரட்டிய ரூபாய்‌ 5 லட்சத்தை பல்கலைகழகத்தில்‌ 'அறக்கட்டளை நிறுவுவதற்கு நிதியாக' துணைவேந்தரிடம்‌ அளித்தனர்‌.

இந்த நிதியிலிருந்து வரும்‌ வட்டித்தொகையைக்‌ கொண்டு, இனிவரும் காலங்களில் ஏழை மாணவர்களின்‌ கல்விக்கு 'உதவித்‌ தொகை' வழங்குவதற்காக இந்த நிதியை தருவதாக அவர்கள் கூறினார்கள்‌.



இந்த விழாவில்‌ 54 முன்னாள்‌ மாணவர்கள்‌ பங்கேற்றனர்‌. இந்தியா மட்டுமல்லாமல்‌ அமெரிக்கா மற்றும்‌ நியூசிலாந்து நாட்டிலிருந்தும்‌ வந்து

பங்கேற்றனர்‌. இவர்கள்‌ தாங்கள்‌ படித்த கல்லூரியில்‌ மறுபடியும்‌ ஒருமுறை தங்கள்‌ பழைய வாழ்க்கையை வாழ்ந்தும்‌, மற்றும்‌ நினைவு கூர்ந்தும்‌ மகிழ்ந்தனர்‌. தாங்கள்‌ படித்த கல்லூரிக்கு மீண்டும்‌ ஒரு முறை நன்றி கூறி பழைய நினைவுகளோடு விடை பெற்றுச்‌ சென்றனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...