மண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வணங்கி அதை நீரில் கரைப்பது நமது கலாச்சாரமாகும். ஆனால் தற்போது பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்பட்டு வரும் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கோவை: பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகள் தற்போது அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மிகவும் எதிரான இந்தப் பொருள் நீர்நிலைகளில் கரைக்கும் பொழுது நீரை மாசுபடுத்துவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் பெருக்கத்தை குறைக்கிறது.

மேலும் மண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வணங்கி அதை நீரில் கரைப்பது நமது கலாச்சாரமாகும். அதனை மாற்றி சுற்றுச்சூழலுக்கு சீர் கேடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட ஒரு பொருளை வைத்து வணங்கி அதனால் என்ன பயன் காணப் போகிறோம் நாம்..?? என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

எனவே தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் சிலைகளை பறிமுதல் செய்யவும், மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் இவ்வகையான சிலைகள் விற்பனை செய்வதை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி தமிழக அரசுக்கு மற்றும் அதனை சார்ந்த துறைகளுக்கு கோரிக்கை கடிதத்தை முன்கூட்டியே வழங்கி உள்ளதாகவும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகள் தற்போது அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மிகவும் எதிரான இந்தப் பொருள் நீர்நிலைகளில் கரைக்கும் பொழுது நீரை மாசுபடுத்துவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் பெருக்கத்தை குறைக்கிறது.
மேலும் மண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வணங்கி அதை நீரில் கரைப்பது நமது கலாச்சாரமாகும். அதனை மாற்றி சுற்றுச்சூழலுக்கு சீர் கேடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட ஒரு பொருளை வைத்து வணங்கி அதனால் என்ன பயன் காணப் போகிறோம் நாம்..?? என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
எனவே தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் சிலைகளை பறிமுதல் செய்யவும், மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் இவ்வகையான சிலைகள் விற்பனை செய்வதை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி தமிழக அரசுக்கு மற்றும் அதனை சார்ந்த துறைகளுக்கு கோரிக்கை கடிதத்தை முன்கூட்டியே வழங்கி உள்ளதாகவும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.