நீர் நிலைகளை மாசுபடுத்தும் 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' சிலைகள்: தடை விதிக்க கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வேண்டுகோள்..!

மண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வணங்கி அதை நீரில் கரைப்பது நமது கலாச்சாரமாகும். ஆனால் தற்போது பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்பட்டு வரும் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.


கோவை: பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.



தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகள் தற்போது அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மிகவும் எதிரான இந்தப் பொருள் நீர்நிலைகளில் கரைக்கும் பொழுது நீரை மாசுபடுத்துவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் பெருக்கத்தை குறைக்கிறது.



மேலும் மண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வணங்கி அதை நீரில் கரைப்பது நமது கலாச்சாரமாகும். அதனை மாற்றி சுற்றுச்சூழலுக்கு சீர் கேடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட ஒரு பொருளை வைத்து வணங்கி அதனால் என்ன பயன் காணப் போகிறோம் நாம்..?? என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.



எனவே தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் சிலைகளை பறிமுதல் செய்யவும், மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் இவ்வகையான சிலைகள் விற்பனை செய்வதை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி தமிழக அரசுக்கு மற்றும் அதனை சார்ந்த துறைகளுக்கு கோரிக்கை கடிதத்தை முன்கூட்டியே வழங்கி உள்ளதாகவும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...