சாலைகளில் நீர்த்தேக்கம்: "இது கோவை மாநகராட்சியின் நவீன நீர்த்தேக்க திட்டம்" என விமர்சித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

கோவை மாநகராட்சி 77 வது வார்டுக்கு உட்பட்ட செல்வபுரம், ராமமூர்த்தி சாலை பகுதியில் பழுதடைந்த சாலைகள் குறித்து பலமுறை புகார் அளித்தும் செவி சாய்க்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூதன கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி 77 வதுவார்டுக்கு உட்பட்ட செல்வபுரம், ராமமூர்த்தி சாலை பகுதியில் சாலைகள் பழுதடைந்து மிக மோசமான நிலையில் உள்ளதால்,அங்கு அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் தொடர் மழையால்,சாலையில் ஆங்காங்கே குழிகளில் தண்ணீர் தேங்கி, சேரும் சகதியுமாக பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பலமுறை சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் துறையினர் செவி சாய்க்காததால், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியி சார்பில் இன்று நூதன கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

குண்டும் குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கிய பகுதியில், "இது கோவை மாநகராட்சியின் நவீன நீர்த்தேக்க திட்டம்" என்றபதாகைகளை வைத்து விமர்சித்தனர்.



இனியும், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் உடனடியாக சாலைகளை சீரமைக்க வேண்டும், இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம், என தெரிவித்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...