கோவை மாநகராட்சி 77 வது வார்டுக்கு உட்பட்ட செல்வபுரம், ராமமூர்த்தி சாலை பகுதியில் பழுதடைந்த சாலைகள் குறித்து பலமுறை புகார் அளித்தும் செவி சாய்க்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூதன கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சி 77 வதுவார்டுக்கு உட்பட்ட செல்வபுரம், ராமமூர்த்தி சாலை பகுதியில் சாலைகள் பழுதடைந்து மிக மோசமான நிலையில் உள்ளதால்,அங்கு அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் தொடர் மழையால்,சாலையில் ஆங்காங்கே குழிகளில் தண்ணீர் தேங்கி, சேரும் சகதியுமாக பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பலமுறை சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் துறையினர் செவி சாய்க்காததால், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியி சார்பில் இன்று நூதன கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
குண்டும் குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கிய பகுதியில், "இது கோவை மாநகராட்சியின் நவீன நீர்த்தேக்க திட்டம்" என்றபதாகைகளை வைத்து விமர்சித்தனர்.

இனியும், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் உடனடியாக சாலைகளை சீரமைக்க வேண்டும், இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம், என தெரிவித்தனர்.
இந்த நிலையில், பலமுறை சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் துறையினர் செவி சாய்க்காததால், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியி சார்பில் இன்று நூதன கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
குண்டும் குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கிய பகுதியில், "இது கோவை மாநகராட்சியின் நவீன நீர்த்தேக்க திட்டம்" என்றபதாகைகளை வைத்து விமர்சித்தனர்.
இனியும், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் உடனடியாக சாலைகளை சீரமைக்க வேண்டும், இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம், என தெரிவித்தனர்.