கோவை தனியார் பள்ளி விடுதியில் இருந்து பள்ளி மாணவர்கள் 3-பேர் திடீர் மாயம்..!

மாணவர்களின் அறையை சோதனையிட்ட போது விடுதியில் தங்க விருப்பம் இல்லை என எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தினருக்கு அழைத்து இன்று காலை மாணவர்கள் வீட்டிற்கு வந்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.


கோவை: கோவை காரமடையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின், விடுதியில் தங்கி படித்து வந்த 3-மாணவர்கள் நேற்று மாலை திடீரென விடுதியிலிருந்து மாயமாகினர்.

இதையடுத்து, விடுதி வார்டன் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். ஆனால் மாணவர்கள் விடுதி முழுவதும் எங்கும் கிடைக்கவில்லை, மேலும் அவர்கள் அறையை சோதனையிட்ட போது அங்கு தங்களுக்கு விடுதியில் தங்க விருப்பம் இல்லை என எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் காரமடை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, போலீசார் மாயமான மூன்று மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தினருக்கு அழைத்து இன்று காலை மாணவர்கள் வீட்டிற்கு வந்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர். அதில், ஒரு மாணவர் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...