கோவை மாவட்டத்தில் மத்திய தரைவழிபோக்குவரத்து அமைச்சகத்தின் தலைமைப்பொறியாளர் எஸ்.சி. மண்டல் மற்றும் தமிழ்நாடு அரசு தேசிய நெடுஞ்சாலை தலைமைப்பொறியாளர் என். பாலமுருகன் ஆகியோர் கோவை - சத்தியமங்கலம் - கர்நாடகா எல்லை சாலையை ஆய்வு செய்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக நடைபெற்று வரும் கோவை - சத்தியமங்கலம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மற்றும் கோவை அரைவட்ட சாலை அமைக்கும் பணி, ஆகிய இரு பணிகளுக்கும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகளை தமிழ்நாடு அரசு தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் செயல்படுத்த மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தின் (MORT,H) மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மத்திய தரைவழிபோக்குவரத்து அமைச்சகத்தின் தலைமைப்பொறியாளர் எஸ்.சி. மண்டல் மற்றும் தமிழ்நாடு அரசு தேசிய நெடுஞ்சாலை தலைமைப்பொறியாளர் என். பாலமுருகன் ஆகியோர் கோவை - சத்தியமங்கலம் - கர்நாடகா எல்லை சாலையை ஆய்வு செய்தனர்.
மேலும் தேசியநெடுஞ்சாலை தலைமைப்பொறியாளர் என். பாலமுருகன் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வரும் சுங்கம் – இராமநாதபுரம் சாலையில் ராமநாதபுரம் பாலத்தினை ஆய்வு செய்தார்.
அதன் அடிப்படையில் மத்திய தரைவழிபோக்குவரத்து அமைச்சகத்தின் தலைமைப்பொறியாளர் எஸ்.சி. மண்டல் மற்றும் தமிழ்நாடு அரசு தேசிய நெடுஞ்சாலை தலைமைப்பொறியாளர் என். பாலமுருகன் ஆகியோர் கோவை - சத்தியமங்கலம் - கர்நாடகா எல்லை சாலையை ஆய்வு செய்தனர்.
மேலும் தேசியநெடுஞ்சாலை தலைமைப்பொறியாளர் என். பாலமுருகன் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வரும் சுங்கம் – இராமநாதபுரம் சாலையில் ராமநாதபுரம் பாலத்தினை ஆய்வு செய்தார்.