ஆக்கிரமிப்பில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க வேண்டும்- கோவை பொள்ளாச்சியில் விசுவ இந்து பரிசத் தீர்மானம்..!

தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க வேண்டும் என பொள்ளாச்சியில் நடைபெற்ற விசுவ இந்து பரிசத் தென் தமிழக செயல்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: விசுவ இந்து பரிசத் அமைப்பின் தென் தமிழ்நாடு செயற்குழு கூட்டம் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும், இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயில்களிலிருந்து வரும் வருமானத்தை கோயில் மேம்பாட்டுக்காகவும், இந்து கலாச்சார பாதுகாப்பிற்காகவும் செலவிட வேண்டும், இந்து கோயில்களின் சொத்துக்களை விற்க முனைப்பதையும் அரசு கைவிட வேண்டும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கோசாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விசுவ இந்து பரிசத் அகில பாரத இணை செயலாளர் நாகராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் பல ஆண்டுகள் சரியான பாதுகாப்பு இல்லாமல் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது.

இதனால் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சொத்துக்கள் சிக்கி உள்ளது. இதை மீட்டெடுக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...