கோவை குடிசை மாற்று வாரியத்தில் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட நபர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டி பாஜகவினர் மனு..!

80-வீடுகளில் 50-வீடுகளுக்கு பணத்தை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் பெற்றுக் கொண்டு மீதமுள்ள 30-வீடுகளுக்கு கட்டணத்தை பெற மறுப்பதாகவும் இதனால், டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட மக்களுக்கு வீடுகள் கிடைக்காமல் போகும் சூழ்நிலை நிலவுவதாக ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்.


கோவை: குடிசை மாற்று வாரியத்தில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட பிறகும் வீடுகளை பயனாளர்களுக்கு வழங்க நிராகரிப்பதாக கூறி பாஜகவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை காந்தி பார்க் பகுதியில் எட்டு மாடி கட்டிடத்தில் 100-புதிய வீடுகள் தயாராகி வருகிறது. இதற்காக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், வீடு ஒதுக்கீடு செய்வதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், 80-வீடுகளில் 50 வீடுகளுக்கு பணத்தை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் பெற்றுக் கொண்டு மீதமுள்ள 30 வீடுகளுக்கு கட்டணத்தை பெற மறுப்பதாகவும், எனவே டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட மக்களுக்கு வீடுகள் கிடைக்காமல் போகும் சூழ்நிலை நிலவுவதாகவும், எனவே டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட நபர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.கோவை மாநகர் மாவட்ட பட்டியல் அணி தலைவர் விவேக் தலைமையில் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...