நேற்று பெய்த கனமழையால் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழை பெய்து நீர் தேங்காமல் இருக்கவும், ஒரு வேலை தேங்கினால் உடனடியாக அப்புறப்படுத்த ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோவையில் நேற்று பெய்த கனமழையால் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இதில், கிக்கானி பாலத்தின் அருகே தண்ணீர் நிரம்பி, கார் சிக்கியது. மேலும் அதில் சிக்கிக்கொண்ட 7-பேர் மீட்கப்பட்டனர். இந்நிலையில், மழை நீர் தேங்கிய இடங்களில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இரவு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், கிக்கானிக் மேம்பாலத்திற்கு நேரில் சென்ற மாநகராட்சிஆணையாளர் மு.பிரதாப் பார்வையிட்டு நள்ளிரவுக்குள் தண்ணீரை அதிநவீன மோட்டார் பொருத்திய வாகனங்கள் மூலம் வெளியேற்றப் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இதே போல மழை பெய்து நீர் தேங்காமல் இருக்கவும், ஒரு வேலை தேங்கினால் உடனடியாக அப்புறப்படுத்தவும் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.