'சாக்கடை கால்வாய் பாலம் உடைப்பு'- பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் துணைத்தலைவரின் செயலை தட்டிக் கேட்ட நகர்மன்ற உறுப்பினர்..!

32-வது வார்டுக்கு உட்பட்ட ஊத்துக்காடு ரோடு சாலையில் இருந்த சாக்கடை கால்வாய் பாலத்தை துணைத் தலைவர் உடைத்ததாக கூறி 32-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் 'என்னைக் கேட்காமல் எனது வார்டில் எப்படி பாலத்தை உடைக்கலாம்?', என கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் துணைத் தலைவர் சாக்கடை கால்வாயை தன்னிச்சையாக உடைத்ததாக கூறி கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி நகர மன்ற மாதாந்திர வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.நகர மன்ற தலைவி சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாதாள திட்டத்தில் ஆள் இறங்கு குழிகளை செப்பனிடுவது, நகராட்சி பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, மேலும், குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அப்போது 32 வது வார்டுக்கு உட்பட்ட ஊத்துக்காடு ரோடு சாலையில் இருந்த சாக்கடை கால்வாய் பாலத்தை துணைத் தலைவர் கௌதமன் தன்னிச்சையாக உடைத்ததாக கூறி 32 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பெருமாள் என்னைக் கேட்காமல் எனது வார்டில் எப்படி பாலத்தை உடைக்கலாம், இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள் என கூறி துணைத் தலைவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, கவுன்சிலர்கள் சிலரும் கூச்சலிட்டு வாக்குவாதம் செய்ததால் கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நகர மன்ற தலைவி வார்டு உறுப்பினர்களை சமாதானம் செய்து வைத்தார். பின்னர் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...