32-வது வார்டுக்கு உட்பட்ட ஊத்துக்காடு ரோடு சாலையில் இருந்த சாக்கடை கால்வாய் பாலத்தை துணைத் தலைவர் உடைத்ததாக கூறி 32-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் 'என்னைக் கேட்காமல் எனது வார்டில் எப்படி பாலத்தை உடைக்கலாம்?', என கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கோவை: பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் துணைத் தலைவர் சாக்கடை கால்வாயை தன்னிச்சையாக உடைத்ததாக கூறி கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி நகர மன்ற மாதாந்திர வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.நகர மன்ற தலைவி சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாதாள திட்டத்தில் ஆள் இறங்கு குழிகளை செப்பனிடுவது, நகராட்சி பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, மேலும், குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அப்போது 32 வது வார்டுக்கு உட்பட்ட ஊத்துக்காடு ரோடு சாலையில் இருந்த சாக்கடை கால்வாய் பாலத்தை துணைத் தலைவர் கௌதமன் தன்னிச்சையாக உடைத்ததாக கூறி 32 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பெருமாள் என்னைக் கேட்காமல் எனது வார்டில் எப்படி பாலத்தை உடைக்கலாம், இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள் என கூறி துணைத் தலைவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கவுன்சிலர்கள் சிலரும் கூச்சலிட்டு வாக்குவாதம் செய்ததால் கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நகர மன்ற தலைவி வார்டு உறுப்பினர்களை சமாதானம் செய்து வைத்தார். பின்னர் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
பொள்ளாச்சி நகர மன்ற மாதாந்திர வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.நகர மன்ற தலைவி சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாதாள திட்டத்தில் ஆள் இறங்கு குழிகளை செப்பனிடுவது, நகராட்சி பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, மேலும், குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அப்போது 32 வது வார்டுக்கு உட்பட்ட ஊத்துக்காடு ரோடு சாலையில் இருந்த சாக்கடை கால்வாய் பாலத்தை துணைத் தலைவர் கௌதமன் தன்னிச்சையாக உடைத்ததாக கூறி 32 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பெருமாள் என்னைக் கேட்காமல் எனது வார்டில் எப்படி பாலத்தை உடைக்கலாம், இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள் என கூறி துணைத் தலைவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கவுன்சிலர்கள் சிலரும் கூச்சலிட்டு வாக்குவாதம் செய்ததால் கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நகர மன்ற தலைவி வார்டு உறுப்பினர்களை சமாதானம் செய்து வைத்தார். பின்னர் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.