12-ம் வகுப்புக்கு பாடம் நடத்தும் தாவரவியல் ஆசிரியர் மற்றும் இயற்பியல் ஆசிரியர் இருவரும் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், சைல்டு லைன் எண்ணிற்கு அழைத்து மாணவி புகார் தெரிவித்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை: பொள்ளாச்சி அருகே பள்ளிமாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் தன் பள்ளியில்12-ம்வகுப்புக்கு பாடம் நடத்தும் தாவரவியல் ஆசிரியர் பாலச்சந்திரன் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், சைல்டு லைன் எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, அந்த மாணவியிடம் விசாரணை நடத்திய குழந்தைகள் நல குழு மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். பின்னர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில், பொள்ளாச்சி சூலேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் மற்றும் கோவை சித்ரா பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் தன் பள்ளியில்12-ம்வகுப்புக்கு பாடம் நடத்தும் தாவரவியல் ஆசிரியர் பாலச்சந்திரன் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், சைல்டு லைன் எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, அந்த மாணவியிடம் விசாரணை நடத்திய குழந்தைகள் நல குழு மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். பின்னர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில், பொள்ளாச்சி சூலேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் மற்றும் கோவை சித்ரா பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.