கோவை மாவட்டத்தில் 74 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்த திட்டம்..!

கோவையில் 5 மண்டலங்கள் இருப்பதால், மண்டலத்துக்கு ஒன்று வீதம் என 5 இடங்களில் சமையலறைகள் கட்டப்படுகின்றன. அங்கிருந்து, அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு, உணவு சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


தமிழக அரசு அறிவித்துள்ள காலை உணவு திட்டத்தை, கோவை மாவட்டத்தில் உள்ள 74 அரசு பள்ளிகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம் மூலமாக 1,39,138 மாணவ-மாணவிகள் பயன் பெறுவர்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) ஸ்ரீதர் கூறும்போது, தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த இந்த திட்டத்தின் படி கோவையில் காலை உணவு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவில் ஏற்கனவே மதிய உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளில் சிலர் இந்த காலை உணவு திட்டத்திலும் பயன்பெறுவர்.

மாணவ, மாணவிகளுக்கு தரமான உணவு, முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் எவ்வளவு பேர் உணவு சாப்பிடுகிறார்கள், உணவின் தரம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, என்றார்.

"கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கோவையில் 5 மண்டலங்கள் இருப்பதால், மண்டலத்துக்கு ஒன்று வீதம் 5 இடங்களில் சமையலறைகள் கட்டப்படுகின்றன. அங்கிருந்த, அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு, உணவு சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 9 பள்ளிகளில் படிக்கும், 1,119 மாணவ மாணவிகளுக்கு, மதுக்கரை நகராட்சியில் 3 பள்ளிகளை சேர்ந்த, 739 மாணவர்களும் காலை உணவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். காலை உணவு தயாரிக்க, சமையலறை கட்டும் பணி தொடங்கி உள்ளதாக', மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெரைட்டி..!

திங்கள்கிழமை - உப்புமா, ரவா, சேமியா, அரிசி, கோதுமை ரவா போன்றவற்றில் செய்த உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்; செவ்வாய்க்கிழமை - ரவா, சேமியா, சோளம், கோதுமை ரவா போன்றவற்றில் ஏதாவது ஒன்றில் காய்கறி சேர்த்து கிச்சடி;பபுதன்கிழமை - ரவா பொங்கல், வெண் பொங்கல், காய்கறி சாம்பார்; வியாழக்கிழமை - உப்புமா மற்றும் வெள்ளிக்கிழமை, எதாவது ஒரு கிச்சடியுடன் ரவா கேசரி அல்லது சேமியா கேசரி என் ஒரு இனிப்பு வழங்கப்படும்.

தினமும் காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு அளிக்கப்படும் என்றும் வாரம் இரு நாள், உள்ளூரில் கிடைக்கும் சிறு தானியத்தில் செய்த காலை உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் படிப்படியாக அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை சத்துணவு திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது, பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...