ஆபத்தான வளைவாக கருதப்படும் மேம்பாலத்தின் சுங்கம் வளைவில் சாலை தடுப்புகளில் சுமார் 3 அடி உயரத்திற்கு, 30 மீட்டர் தொலைவிற்கு இரும்பு தடுப்புகள் போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மற்ற வளைவுகளில் இதேபோல இரும்பு தடுப்புகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை: கோவை - திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக ராமநாதபுரம் அல்வோ்னியா பள்ளி முதல் ரெயின்போ வரை 3.1 கிலோ மீட்டா் தூரத்துக்கு ரூ.253 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. இப்பாலம், கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்த நிலையில், பாலம் திறந்த ஒரு மாதத்திற்குள் இரு சக்கர வாகன ஓட்டிகள் இருவர், பாலத்தின் மேல் பகுதியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.

இருவரும் அதி வேகமாக வாகனத்தை இயக்கியதால், விபத்து ஏற்பட்டது என்று கூறப்பட்ட நிலையில், விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக வேகத்தடை, இரும்புத் தடுப்புகள், ஒளிரும் பட்டைகள் என பல்வேறு முயற்சிகள் காவல்துறை சார்பாக எடுக்கப்பட்டது.

இருப்பினும், மீண்டும் ஒரு இரு சக்கர வாகன ஓட்டி சுங்கம் வளைவு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். தொடர்ந்து, உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் வேககட்டுப்பாடுகள் குறித்தான அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டது.

அதையடுத்து, இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், ஆபத்தான வளைவாக கருதப்படும் மேம்பாலத்தின் சுங்கம் வளைவில் சாலை தடுப்புகளில் சுமார் 3 அடி உயரத்திற்கு, 30 மீட்டர் தொலைவிற்கு இரும்பு தடுப்புகள் போடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, மற்ற வளைவுகளில் இதேபோல இரும்பு தடுப்புகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது போல் தடுப்புகள் அமைக்கபடுவதால், கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் வந்து விபத்தில் சிக்கினாலும், பாலத்தில் இருந்து கீழே விகுந்து உயிரிழக்கும் அபாயம் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்களை தவிர்க்க வேறென்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்னது குறித்து போக்குவரத்து போலீசார், மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாலம் திறந்த ஒரு மாதத்திற்குள் இரு சக்கர வாகன ஓட்டிகள் இருவர், பாலத்தின் மேல் பகுதியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.
இருவரும் அதி வேகமாக வாகனத்தை இயக்கியதால், விபத்து ஏற்பட்டது என்று கூறப்பட்ட நிலையில், விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக வேகத்தடை, இரும்புத் தடுப்புகள், ஒளிரும் பட்டைகள் என பல்வேறு முயற்சிகள் காவல்துறை சார்பாக எடுக்கப்பட்டது.
இருப்பினும், மீண்டும் ஒரு இரு சக்கர வாகன ஓட்டி சுங்கம் வளைவு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். தொடர்ந்து, உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் வேககட்டுப்பாடுகள் குறித்தான அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டது.
அதையடுத்து, இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், ஆபத்தான வளைவாக கருதப்படும் மேம்பாலத்தின் சுங்கம் வளைவில் சாலை தடுப்புகளில் சுமார் 3 அடி உயரத்திற்கு, 30 மீட்டர் தொலைவிற்கு இரும்பு தடுப்புகள் போடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மற்ற வளைவுகளில் இதேபோல இரும்பு தடுப்புகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது போல் தடுப்புகள் அமைக்கபடுவதால், கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் வந்து விபத்தில் சிக்கினாலும், பாலத்தில் இருந்து கீழே விகுந்து உயிரிழக்கும் அபாயம் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்களை தவிர்க்க வேறென்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்னது குறித்து போக்குவரத்து போலீசார், மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.