கோவையில் 100 க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கையில் சிமினி விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: 100 க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் ஆண்களும், பெண்களும் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புகளை தெரிவித்தும் இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும், மாதந்தோறும் மின் கட்டண செலுத்தும் முறையை அமுல்படுத்த வேண்டுமென கூறி கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது இப்ராகிம் தலைமையில் சிமினி விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதில் 100க்கும் மேற்பட்டோர் கையில் சிமினி விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மின் கட்டண உயர்வுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் பெண்கள் உட்பட பலர் வரிசையில் நின்று கண்டனங்களை தெரிவித்தனர்.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புகளை தெரிவித்தும் இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும், மாதந்தோறும் மின் கட்டண செலுத்தும் முறையை அமுல்படுத்த வேண்டுமென கூறி கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது இப்ராகிம் தலைமையில் சிமினி விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் 100க்கும் மேற்பட்டோர் கையில் சிமினி விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மின் கட்டண உயர்வுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் பெண்கள் உட்பட பலர் வரிசையில் நின்று கண்டனங்களை தெரிவித்தனர்.