கோவையில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஓட்டுநர் போக்ஸோவில் கைது…!

13 வயது பள்ளி மாணவியிடம் பழகி வந்த ஓட்டுனர், ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், பேரூர் அனைத்து காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.


கோவை: கோவையில் வசித்து வரும் 13 வயது சிறுமி தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவரிடம் வீட்டின் அருகே வசித்து வந்த 32 வயது லாரி ஓட்டுநர் நண்பராக பழகி வந்ததாக தெரிகிறது.

மேலும், கடந்த 2.5 ஆண்டுகளாக பழகி வந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதையும் மறைத்து, சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை பேசி பழகி வந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு கட்டத்தில் நடந்ததை தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தந்தை மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்கு பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

விசாரணைக்கு பின்னர், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ஓட்டுநரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...