13 வயது பள்ளி மாணவியிடம் பழகி வந்த ஓட்டுனர், ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், பேரூர் அனைத்து காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
கோவை: கோவையில் வசித்து வரும் 13 வயது சிறுமி தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவரிடம் வீட்டின் அருகே வசித்து வந்த 32 வயது லாரி ஓட்டுநர் நண்பராக பழகி வந்ததாக தெரிகிறது.
மேலும், கடந்த 2.5 ஆண்டுகளாக பழகி வந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதையும் மறைத்து, சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை பேசி பழகி வந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு கட்டத்தில் நடந்ததை தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தந்தை மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்கு பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
விசாரணைக்கு பின்னர், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ஓட்டுநரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், கடந்த 2.5 ஆண்டுகளாக பழகி வந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதையும் மறைத்து, சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை பேசி பழகி வந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு கட்டத்தில் நடந்ததை தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தந்தை மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்கு பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
விசாரணைக்கு பின்னர், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ஓட்டுநரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.