கோவை மேம்பால தூண்களில் போஸ்டர் ஒட்டிய, 5 நிறுவனத்தினர் மீது வழக்கு பதிவு - மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை..!

தடையை மீறி போஸ்டர்களை ஒட்டிய, தி கோவை ஹெரால்டு, தி கோவை மெயில், ஷைன் ஐ.ஏ.எஸ்., அகாடமி, புரபென்னா டெக்னாலஜீஸ், ரெட் டாக்சி ஆகிய ஐந்து நிறுவனங்கள் மீது, தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் சீரழிப்பு தடுப்புச்சட்டப் படி, வழக்கு பதியப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள மேம்பாலங்கள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களில், விளம்பரங்கள் எழுதுவது மற்றும் சுவரொட்டிகள் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எச்சரித்திருந்த நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டிய நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை பாய்ந்துள்ளது.

உத்தரவை மீறி சுவரோட்டிகள் ஒட்டும் சம்மந்தப்பட்ட நிறுவனம், விளம்பர நிறுவனம், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள், பொது நிகழ்ச்சி மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்காக சுவரொட்டி வைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தடையை மீறி பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டிய நிறுவனங்கள் குறித்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் ஜெயலஷ்மி அளித்த புகார்படி, பீளமேடு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அதன்படி, தி கோவை ஹெரால்டு, தி கோவை மெயில், ஷைன் ஐ.ஏ.எஸ்., அகாடமி, புரபென்னா டெக்னாலஜீஸ், ரெட் டாக்சி ஆகிய ஐந்து நிறுவனங்கள் மீது, தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் சீரழிப்பு தடுப்புச்சட்டப் படி, வழக்கு பதியப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அவினாசி சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பால தூண்களில் பெரும்பாலும் திமுக கட்சியின் போஸ்டர்கள் ஒட்டப்படுள்ளது. குறிப்பாக, முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் சார்பில் திமுக அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான போஸ்டர்களை கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒட்டியுள்ளனர். அதே போல, பிற அரசியல் கட்சியினரும் போஸ்டர்களை ஆங்காங்கே ஒட்டியுள்ளனர்.

எனவே, தடையை மீறி போஸ்டர்கள் ஒட்டிய தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது போல, அரசியல் கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...