கோவை மாநகராட்சியில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை

கோவை மாநகராட்சி பகுதிகளில் மேலும் மூன்று மண்டலத்தில் தெருநாய்கள்‌ கருத்தடை மையம், புதிதாக ஏற்படுத்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்‌.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ தெரு நாய்கள்‌ பிடிப்பதற்கு மாநகராட்சி தொண்டு நிறுவனம்‌ மூலம்‌ எங்கெல்லாம்‌ நாய்கள்‌ தொந்தரவு அதிகமாக உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு தொண்டு நிறுவனத்தை அனுப்பி அந்த நாய்களை பிடித்து கருத்தடை செய்பும்‌ பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும்‌, இந்த தொண்டு நிறுவனத்தை முன்கூட்டியே எந்தெந்த பகுதிக்கு செல்ல வேண்டும்‌ என்பதை மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி மக்களுக்கு தொந்தரவு செய்யும்‌ தெரு நாய்களை பிடிக்கும்‌ பணி தொடாந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று 29.07.2022 கரும்புக்கடை, ஆசாத்‌ நகர்‌, சாரமேடு, திப்பு நகா்‌, மதினா நகர்‌, குழந்தைகவுண்டா்‌ வீதி, கோவில்மேடு, வேலாண்டிபாளையம்‌ ஆகிய இடங்களில் நாய்கள் பிடிக்கும் பணி நடந்தது.

தொடர்ந்து நாளை 30.07.2022 அல்‌அமீன்‌ காலனி, ரோசா கார்டன்‌, புல்லுக்காடு, ஹவுசிங்‌ யூனிட்‌ மெயின்‌ ரோடு, பொன்விழா நகர்‌, மணியகாரம்பாளையம்‌, கணபதி ஆகிய பகுதிகளிலும்.

01.08.2022 அன்று அன்பு நகா்‌, அற்புதம்‌ நகா்‌, சவுகார்‌ நகா்‌, சேரன்‌ நகரிலும்.

02.08.2022 அன்று அண்ணா காலனி, கரும்புக்கடை பள்ளி வாசல்‌ வீதியிலும்.

03.08.2022 அன்று நஞ்சுண்டாபுரம்‌, பெருமாள்‌ கோவில்‌ வீதி, மாரியம்மன்‌ கோவில்‌, பாடசாலை வீதி, பரீபதி நகா்‌, நேதாஜி நகர்‌, SMV கார்டனிலும்.

04.08.2022 அன்று சாரமேடு, காந்தி நகா்‌, கிரீன்‌ பார்க்‌, நாணியா நகா்‌, ஜே.ஜே.கார்டன்‌, சபா கார்டன்‌, மெட்ரோ சிட்டி, போயஸ்‌ கார்டனிலும் நாய்கள் பிடிக்கும் பணி நடக்கும்,

மேலும்‌, மேற்கு மண்டலம்‌ சீரநாய்க்கன்பாளையம்‌ மற்றும்‌ கிழக்கு மண்டலம்‌ ஒண்டிப்புதூர்‌ பகுதிகளில்‌ தெருநாய்கள்‌ கருத்தடை மைமானது செயல்பட்டு வருகிறது. மற்ற மூன்று மண்டலத்திற்கு தெருநாய்கள்‌ கருத்தடை மையமானது புதிதாக ஏற்படுத்திட மாநகராட்சி நிரவாகம்‌ விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...