கோவை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தண்ணீர்‌, பல்லுயிர்‌, சுற்றுச்சூழல்‌, இயற்கை மற்றும்‌ காடுகள்‌ குறித்து விழிப்புணர்வு..!

மாநகராட்சி மற்றும்‌ நகர்ப்புற பல்லுயிர்‌ பாதுகாப்பு மையம்‌ (CUBE) இணைந்து மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தண்ணீர்‌, பல்லுயிர்‌, சுற்றுச்சூழல்‌, இயற்கை மற்றும்‌ காடுகள்‌ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தும்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர்‌ தொடங்கி வைத்தார்‌.


கோவை: கோவை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தண்ணீர்‌, பல்லுயிர்‌, சுற்றுச்சூழல்‌, இயற்கை மற்றும்‌ காடுகள்‌ குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர்‌ தொடங்கி வைத்தார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி சிங்காநல்லூர்‌ குளக்கரையில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மற்றும்‌ நகர்ப்புற பல்லுயிர்‌ பாதுகாப்பு மையம்‌ (CUBE) இணைந்து மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தண்ணீர்‌, பல்லுயிர்‌, சுற்றுச்சூழல்‌, இயற்கை மற்றும்‌ காடுகள்‌ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தும்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தொடங்கி வைத்தார்‌.

மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, செய்தியாளர்களிடம்‌ தெரிவித்ததாவது, இப்பயிற்சியானது இயற்கையான இடங்களில்‌ ஒவ்வொரு வாரமும்‌ இரண்டு நாட்கள்‌ நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளியின்‌ 30 முதல்‌ 35 மாணவ, மாணவிகள்‌, 2 ஆசிரியர்கள்‌ கொண்ட குழுவாக ஒரு கிலோமீட்டர்‌ தூரம்‌ நடந்து செல்லும்‌ வழியில்‌ தண்ணீர்‌, பல்லுயிர்‌, சுற்றுச்சூழல்‌, இயற்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. மேலும்‌, இயற்கை பற்றிய விழிப்புணர்வு பயிற்சியை மூன்று மாதத்திற்கு ஒருமுறை சுழற்சி கால அட்டவணைப்படி நடத்தப்பட உள்ளது.

சிங்காநல்லூர்‌ குளத்திற்குப் பல நாடுகளிலிருந்து பலவகையான பறவைகள்‌ வந்து செல்கின்றன. பலவகையான வண்ணத்துப்பூச்சிகளும்‌ உள்ளது. இயற்கை சூழல்‌ நிறைந்த சிங்காநல்லூர்‌ குளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்‌. மேலும்,‌ கழிவுநீர்‌ குளத்திற்குள்‌ வராமல்‌ தடுக்க இயற்கையான முறையில்‌ வேளாண்‌ பல்கலைக்கழக விஞ்ஞானிகளோடு கலந்தாலோசித்து திட்டம்‌ தயாரித்து அதனை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்‌.

மேலும்‌ ஆகாயத்தாமரைகளை அகற்ற புதிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌, மாநகராட்சியில்‌ உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும்‌ சிங்காநல்லூர்‌ குளத்தைப் பார்வையிட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும்‌ சிங்காநல்லூர்‌ குளத்திற்கு வரும்‌ ராஜவாய்க்கால்வாய்‌ மற்றும்‌ பெரிய குளம்‌, வாலாங்குளம்‌ வழியாக வரும்‌ கால்வாயும்‌ உடனடியாக தூர்வாரப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்தார்‌.



இந்நிகழ்வின்போது மாவட்ட வன அலுவலர்‌ டி.கே.அசோக்குமார்‌, உதவி ஆணையர்‌ முத்து இராமலிங்கம்‌, சுகாதார அலுவலர்‌ முருகா, மதுக்கரை வன சரகர் ப.சந்தியா, மதுக்கரை வனவர்‌ ஐயப்பன்‌, மசக்காளிபாளையம்‌ மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.‌

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...