திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் சார்பில் மனித சங்கிலி அமைத்து, புலி போன்று வேடமிட்டு, புலிகளின் பயன் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர்: உலக புலிகள் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் புலி வேடமிட்டு பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடந்த 2010-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கில், உலகம் முழுவதும் உள்ள நாடுகள் புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29-ஆம் தேதி புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவிகள் சார்பில் மனித சங்கிலி அமைத்து, புலி போன்று வேடமிட்டு, புலிகளின் பயன் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.