செல்வபுரத்தில் குடோனை வாடகைக்கு எடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும், இரண்டு பேர் மீதும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும், விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர்.
கோவை: கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, 32-கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை வடக்கு காவல் துணை ஆணையாளர் மாதவன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் யூசப் மற்றும் போலீசார் ஞானவேல், மாதேஷ், தமிழரசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளை கைது செய்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், ரயில் நிலையம் பின்புறம் உள்ள கூட்செட் சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக இருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது, அவரிடம் 32-கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திண்டுக்கல்லை சேர்ந்த முத்தாலப்பன் (37), என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரது செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.
அப்போது, அவரது செல்போனுக்கு தொடர்ந்து ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது. அந்த அழைப்பை எடுத்து போலீசார் அதில், எதிரே பேசிய இளைஞர் கஞ்சா விற்று விட்டாயா? பணம் எப்போது கிடைக்கும்? என கேட்டுள்ளார்.
உடனே போலீசார் அவரிடம் கஞ்சா விற்று விட்டேன் வெரைட்டி ஹால்ரோடு வந்து பெற்றுக் கொள்ளவும் என தெரிவித்தனர். இதனை உண்மை என நினைத்த அந்த இளைஞர் வெரைட்டி ஹால் ரோடு அருகே வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அவர் செல்வபுரத்தைச் சேர்ந்த ராஜா (41) என்பதும் அவர் செல்வபுரத்தில் குடோனை வாடகைக்கு எடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் மேலும், இவர்கள் இரண்டு பேர் மீதும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை வடக்கு காவல் துணை ஆணையாளர் மாதவன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் யூசப் மற்றும் போலீசார் ஞானவேல், மாதேஷ், தமிழரசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளை கைது செய்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், ரயில் நிலையம் பின்புறம் உள்ள கூட்செட் சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக இருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது, அவரிடம் 32-கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திண்டுக்கல்லை சேர்ந்த முத்தாலப்பன் (37), என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரது செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.
அப்போது, அவரது செல்போனுக்கு தொடர்ந்து ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது. அந்த அழைப்பை எடுத்து போலீசார் அதில், எதிரே பேசிய இளைஞர் கஞ்சா விற்று விட்டாயா? பணம் எப்போது கிடைக்கும்? என கேட்டுள்ளார்.
உடனே போலீசார் அவரிடம் கஞ்சா விற்று விட்டேன் வெரைட்டி ஹால்ரோடு வந்து பெற்றுக் கொள்ளவும் என தெரிவித்தனர். இதனை உண்மை என நினைத்த அந்த இளைஞர் வெரைட்டி ஹால் ரோடு அருகே வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அவர் செல்வபுரத்தைச் சேர்ந்த ராஜா (41) என்பதும் அவர் செல்வபுரத்தில் குடோனை வாடகைக்கு எடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் மேலும், இவர்கள் இரண்டு பேர் மீதும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.