'கல்லூரி மாணவர்கள் தான் எங்க டார்கெட்'- கோவையில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது: 32-கிலோ கஞ்சா பறிமுதல்..!

செல்வபுரத்தில் குடோனை வாடகைக்கு எடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும், இரண்டு பேர் மீதும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும், விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர்.


கோவை: கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, 32-கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை வடக்கு காவல் துணை ஆணையாளர் மாதவன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் யூசப் மற்றும் போலீசார் ஞானவேல், மாதேஷ், தமிழரசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளை கைது செய்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், ரயில் நிலையம் பின்புறம் உள்ள கூட்செட் சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக இருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது, அவரிடம் 32-கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திண்டுக்கல்லை சேர்ந்த முத்தாலப்பன் (37), என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரது செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.

அப்போது, அவரது செல்போனுக்கு தொடர்ந்து ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது. அந்த அழைப்பை எடுத்து போலீசார் அதில், எதிரே பேசிய இளைஞர் கஞ்சா விற்று விட்டாயா? பணம் எப்போது கிடைக்கும்? என கேட்டுள்ளார்.

உடனே போலீசார் அவரிடம் கஞ்சா விற்று விட்டேன் வெரைட்டி ஹால்ரோடு வந்து பெற்றுக் கொள்ளவும் என தெரிவித்தனர். இதனை உண்மை என நினைத்த அந்த இளைஞர் வெரைட்டி ஹால் ரோடு அருகே வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர் செல்வபுரத்தைச் சேர்ந்த ராஜா (41) என்பதும் அவர் செல்வபுரத்தில் குடோனை வாடகைக்கு எடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் மேலும், இவர்கள் இரண்டு பேர் மீதும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...