தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் வெடித்தது மாணவர் போராட்டம்



தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போரட்டங்களில் இறங்கினர். தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அவசர சட்டம் இயற்றப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மாணவர்களின் இந்த அறப்போராட்டத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்திம் பாரம்பரிய விளையாட்டான கம்பளா-வுக்கு இருக்கும் தடையை நீக்க வலியுறுத்தி அம்மாநில மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  எருதுகள் பந்தையமான கம்பளா விளையாட்டில் எருதுகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா முறையீடு செய்த வழக்கில் அவ்விளையாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது.

தங்கள் பாரம்பரிய விளையாட்டுக்கு இருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று கர்நாடக மாணவர்கள் மற்றும் மக்கள் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.மேலும், கன்னட பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திவருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா-வின் அரசு கம்பலா விளையாட்டுக்கு ஆதரவாக இருக்கிறது. இருந்த் போதும், உச்ச நீதிமன்றம் தடை வித்துள்ளதால் விளையாட்டை நடத்தமுடியாத சூழல் உருவாகியிருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார். மேலும், தேவைப்பட்டால் தமிழகம் போல கர்நாடகத்திலும் அவசரச்சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...