கோவை சுகுணாபுரம் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் கைது: பேரூர் கல்வி மாவட்ட அதிகாரி பேட்டி..!

பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேரூர் கல்வி மாவட்ட அதிகாரி ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.



கோவை: கோவை அருகே உள்ள பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்வதாக கூறி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.



கோவை சுகுணாபுரம் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் மீது குற்றம்சாட்டி 200-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர், ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், ஆசிரியர் கைது செய்யப்பட்டதாகவும், காவல்துறையினர் தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே, மாணவிகளின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை முடிவின் அடிப்படையில் 24 மணி நேரத்திற்குள் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை பேரூர் கல்வி மாவட்ட அதிகாரி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியர் மீதான நடவடிக்கை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முடிவெடுப்பார் என்றும் கூறினார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...