நல்ல பருவமழை, மூலப்பொருட்கள் விலை குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் இவ்வாண்டு 'பம்ப் உற்பத்தி தொழில்' வளர்ச்சி சிறப்பாக இருக்கும்: 'சீமா' தலைவர் கார்த்திக் நம்பிக்கை..!

நடப்பாண்டு பருவமழை நல்ல முறையில் பெய்து வருவது மற்றும் மூலப் பொருட்கள் விலை குறைந்து வருவது உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு பம்ப் உற்பத்தி தொழில் மிகச் சிறந்த வளர்ச்சியை பெரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என 'சீமா' தலைவர், கே.வி.கார்த்திக் தெரிவித்துள்ளார்.



கோவை: தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(SIEMA) 69-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள 'சீமா' வளாகத்தில் நடந்தது.



இதுகுறித்து 'சீமா' தலைவர், கே.வி.கார்த்திக் பேசியதாவது:-



உற்பத்தி பிரிவை சேர்ந்த அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் இரும்பு தாது மற்றும் ஸ்டீல் முக்கிய மூலப் பொருட்களாகும். இவ்விரு மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்த காரணத்தால், தொழில் துறையினர் மிகவும் நெருக்கடியை எதிர்கொண்டனர்.

தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று பிரதம நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் இரும்பு தாது மற்றும் ஸ்டீல் ஏற்றுமதிக்கு வரி விதித்தனர். இதன் காரணமாக இவ்விரு மூலப் பொருட்களின் விலை குறைந்தது. நியாயமான விலையில் மூலப் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கும் வரை எதிர்வரும் நாட்களிலும் இதே வரி விதிப்பு தொடர வேண்டும்.



தமிழக முதல்வர் ஸ்டாலினும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டிருக்கும் நன்றியை தெரிவிப்பதில் கடமைப்பட்டுள்ளோம். காரணம் இவர்கள் எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையின் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கோவை பம்ப்செட் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியை தக்க வைத்துள்ளன.

கடந்த காலங்களில் மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக பம்ப் உற்பத்தி செய்வதற்கான செலவு 45-சதவீதம் அதிகரித்தது. ஆனால் அதன் விலையை. 25-சதவீதம் மட்டுமே உயர்த்த முடிந்தது. இதனால் உற்பத்தி தொழில் தொடங்கினர் மிகுந்த நெருக்கடியை எதிர்கொண்டனர். பல்வேறு முன்னணி பம்ப் நிறுவனங்கள் தங்களின் பொருட்களின் விலையை உயர்த்திய காரணத்தால் அவர்களது நிலையை மார்க்கெட்டில் தக்க வைத்து கொண்டனர்.

பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்ட போதும் பம்ப் உற்பத்தி துறை 20 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. நடப்பாண்டு பருவமழை நல்ல முறையில் பெய்து வருவது மற்றும் மூலப் பொருட்கள் விலை குறைந்து வருவது உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு பம்ப் உற்பத்தி தொழில் மிகச் சிறந்த வளர்ச்சியை பெரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.



விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் பம்ப்செட் பெரும்பாலும் இந்திய நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் போதும் தொழில் துறையில் பல்வேறு பயன்பாட்டுக்கு தேவைப்படும் வகையில் அதிக மதிப்பு கொண்ட பம்ப் செட் உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்கள் முன் வர வேண்டும்.

இதுபோன்ற ஆக்கப்பூர்வமான திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சீமா சங்கம் சார்பில், ஆவாரம்பாளையம் கோ இந்தியா வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை மையம் 'சிட்டார்க்' வளாகத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதில் 80 சதவீத நிதியுதவி அரசு வழங்கும். இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு ஒரு சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். சீமா சங்கம் சார்பில் 2027 ஆண்டுக்குள் உலக பம்ப் மார்க்கெட்டில் நான்கு சதவீதம் அடைவது குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். அந்த நோக்கம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரித்து உள்ள காரணத்தால் எதிர்வரும் நாட்களில் பம்ப்செட் தொழில் மிகுந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் என்ற அச்சம் தொழில்துறையின் மத்தியில் உள்ளது. இருப்பினும் விவசாய பம்ப்செட்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி திரும்பப் பெறும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

'சீமா' முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார் தொழில்நுட்ப கமிட்டி தலைவர் முருகேசன் உட்பட பல்வேறு தொழில் அமைப்புகளின் தலைவர்கள் நிர்வாக கமிட்டி மற்றும் தொழில்நுட்ப கமிட்டி உறுப்பினர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

புதிய நிர்வாகிகள் தேர்வு

'சீமா' சங்கத்தின் புதிய தலைவராக எலன் பம்ப்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விக்னேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகேந்திரா பம்ப்ஸ் உரிமையாளர் மிதுன் ராமதாஸ், சூப்பர் டெக் நிறுவனத்தின் உரிமையாளர் செந்தில் குமார் மற்றும் அருண் ரங்கநாதன் உள்ளிட்டோர் 'சீமா' சங்கத்தின் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...