புத்தகத்தில் திருவள்ளுவர் ஓவியம் காவி நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த ஆட்சியர், அதனை பார்வையில் குழப்பம் என சொல்லலாம். நான் திருக்குறள் புத்தகத்தின் சட்டையை பார்க்கவில்லை அதனுள் என்ன எழுதி உள்ளது என்று தான் பார்த்தேன். அதில் எல்லா நிறங்களும் உள்ளது அது ஒரு பொக்கிசம் என பதிலளித்தார்.
கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் 6 வது புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று 5000 மாணவர்கள் ஒரே நேரத்தில் திருக்குறள் வாசிக்கும் திருக்குறள் திரள் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு சில காரணங்களால் மாவட்ட ஆட்சியர் சமீரன் தாமதமாக கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.
மேலும், 4 ஒழுக்கம், கல்வி, செல்வம் ஆகிய அதிகாரங்களில் இருந்து 4- திருக்குறள்களை வாசித்தார்.
ஆட்சியர் வாசிக்க வாசிக்க மாணவர்களும் வாசித்தனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், இந்த திருக்குறள் திரள் வாசிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்ததாகவும், இதில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகை புரிந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
மேலும், மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பேச்சு போட்டிகள் நடைபெற்றதாகவும் கூறினார். மேலும் அனைவருக்கும் திருக்குறள் பதிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், அனைவரும் ஒரு புத்தகமாவது வாங்கி செல்வோம் என உறுதி கூறியுள்ளதாகவும் கூறினார். மேலும், மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தில் திருவள்ளுவரின் ஓவியம் காவி நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியதற்குப் பதில் அளித்த அவர், அது தவறான கருத்து, நார்மலாக தான் அச்சடிக்கப்பட்டது. அதனை பார்வையில் குழப்பம் என சொல்லலாம். நான் திருக்குறள் புத்தகத்தின் சட்டையை பார்க்கவில்லை அதனுள் என்ன எழுதி உள்ளது என்று தான் பார்த்தேன். அதில் எல்லா நிறங்களும் உள்ளது அது ஒரு பொக்கிசம் என பதிலளித்தார்.
அட்டுக்கல் விவகாரம் குறித்த கேள்விக்கு, இரண்டு வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும், விசாரணை முடிந்து அது குறித்து விளக்கமாக கூறுகிறேன் என தெரிவித்தார்.