கோவை‌ மாநகராட்சி மத்தியம்‌ மற்றும்‌ வடக்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மை குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ ஆய்வு..!

சின்னமேட்டுப்பாளையம்‌ பகுதியில்‌ ரூ.174-லட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணி மற்றும்‌ ஷாஜகான்‌ நகரில்‌ உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ ரூ.75-லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 7 கூடுதல்‌ வகுப்பறை கட்டடங்கள்‌ மற்றும்‌ அபிவிருத்தி பணிகளை விரைவாக செய்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை‌‌: கோவை‌‌ மாநகராட்சி, வடக்கு மண்டலம்‌, வார்டு எண்‌.4க்குட்பட்ட சின்னமேட்டுப்பாளையம்‌ பகுதியில்‌ ரூ.174 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 1.83 கிலோ மீட்டார்‌ தொலைவிற்குத் தார்‌ சாலை அமைக்கும்‌ பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் பணியை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்குக் கொண்டுவர அறிவுறுத்தினார், வார்டு எண்‌.10க்குட்பட்ட ஷாஜகான்‌ நகரில்‌ உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ ரூ.75 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 7 கூடுதல்‌ வகுப்பறை கட்டடங்கள்‌ மற்றும்‌ அபிவிருத்தி பணிகள்‌ மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளப் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்‌, அப்பள்ளியிலுள்ள அங்கன்வாடி மையத்தை நேரில்‌ சென்று பார்வையிட்டு குழந்தைகளுக்குச் சமைக்கப்படும்‌ உணவின்‌ தரம்‌ மற்றும்‌ சுவை குறித்து ஆய்வு செய்து குழந்தைகளுடன்‌ கலந்துரையாடினார்‌.



முன்னதாக, மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌ 48க்குட்பட்ட இரத்தினபுரி, இராதாகிருஷ்ணன்‌ சாலையில்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கிய பின்னர்‌, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குடிநீர் விநியோகம்‌ குறித்து கேட்டறிந்தார்‌.



இந்த ஆய்வுகளின்போது வடக்கு மண்டல தலைவர்‌ வே.கதிர்வேல்‌, மாமன்ற உறுப்பினா்‌ பிரபா ரவீந்திரன்‌, உதவி ஆணையாளர்கள்‌ சங்கர்‌, மோகனசுந்தரி, செயற்பொறியாளர்‌ முருகேசன்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌ செந்தில்பாஸ்கர்‌, புவனேஸ்வரி, சுகாதார அலுவலாரகள்‌ இராமச்சந்திரன்‌, இராதாகிருஷ்ணன்‌ சுகாதார ஆய்வாளர்‌ சந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...