ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அங்கு வளர்க்கப்பட்டுள்ள மரங்களின் வகைகள் அதன் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து ஓஎஸ்ஆர் இடத்தில் பராமரிக்கப்பட்டு வரும் சப்போட்டா மரம், பாக்கு மரம், பூவரசு மரம் உள்ளிட்ட பல வகையான மரங்களையும் பார்வையிட்டார்.
கோவை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை சர்க்கார் சாமகுளம் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம்பாளையத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி மணிமண்டபம் அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 6.78-லட்சம் மதிப்பில் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அங்கு வளர்க்கப்பட்டுள்ள மரங்களின் வகைகள் அதன் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள ஓஎஸ்ஆர் இடத்தில் பராமரிக்கப்பட்டு வரும் சப்போட்டா மரம், பாக்கு மரம், பூவரசு மரம் உள்ளிட்ட பல வகையான மரங்களையும் பார்வையிட்டார்.

அதனை அடுத்து, எஸ் எஸ் குளம் வட்டார வளர்ச்சி அலுவலகம் பேரூராட்சி அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பதிவேடு நிலம் தொடர்பான பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அனைத்து விதமான பதிவேடுகளையும் முறையாக பராமரிக்கும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், எஸ் எஸ் குளம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் சாலை பணிகள் குறித்து கேட்டறிந்து பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் பொழுது சர்க்கார் சாமகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி மற்றும் அனிதா ஒன்றிய பொறியாளர் சந்திரகலா மண்டல துணை வட்டார அலுவலர் அம்மு உட்பட பலர் உடன் இருந்தனர்.
கோவை சர்க்கார் சாமகுளம் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம்பாளையத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி மணிமண்டபம் அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 6.78-லட்சம் மதிப்பில் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அங்கு வளர்க்கப்பட்டுள்ள மரங்களின் வகைகள் அதன் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள ஓஎஸ்ஆர் இடத்தில் பராமரிக்கப்பட்டு வரும் சப்போட்டா மரம், பாக்கு மரம், பூவரசு மரம் உள்ளிட்ட பல வகையான மரங்களையும் பார்வையிட்டார்.
அதனை அடுத்து, எஸ் எஸ் குளம் வட்டார வளர்ச்சி அலுவலகம் பேரூராட்சி அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பதிவேடு நிலம் தொடர்பான பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அனைத்து விதமான பதிவேடுகளையும் முறையாக பராமரிக்கும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், எஸ் எஸ் குளம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் சாலை பணிகள் குறித்து கேட்டறிந்து பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் பொழுது சர்க்கார் சாமகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி மற்றும் அனிதா ஒன்றிய பொறியாளர் சந்திரகலா மண்டல துணை வட்டார அலுவலர் அம்மு உட்பட பலர் உடன் இருந்தனர்.