தான் உயிர் வாழ முடியாமல் உண்ண உணவின்றி தவிப்பதால், பாகப்பிரிவினை செய்து கிரையம் செய்து வைத்த கிரயத்தை ரத்து செய்து அந்த நிலத்தை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
திருப்பூர்: சொத்தை பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்த தந்தையை நடுத்தெருவில் விட்ட பிள்ளைகள், நியாயம் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி மொரட்டுப்பாளையத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் 70 வயது முதியவர். தனது பூர்வீக 7½ ஏக்கர் நிலம் நெருப்பெரிச்சலில் உள்ளது. அதன் மதிப்பு ரூ.20-கோடியாகும்.

இந்த நிலத்தை இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் ஆகியோருக்கு சில நாட்களுக்கு முன்பு பாகம் பிரித்து கொடுத்துள்ளார். இந்நிலையில், தனது மகள்கள் மற்றும் மகன் ஆகியோர் தன்னை கண்டு கொள்ளாமல் நடுரோட்டில் விட்டதாகவும், அதனால் தான் உயிர் வாழ முடியாமல் உண்ண உணவின்றி தவிப்பதால் பாகப்பிரிவினை செய்து கிரையம் செய்து வைத்த கிரயத்தை ரத்து செய்து அந்த நிலத்தை மீண்டும் தனக்கு ஒப்படைக்க வேண்டும் என கேட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு புகார் செய்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி மொரட்டுப்பாளையத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் 70 வயது முதியவர். தனது பூர்வீக 7½ ஏக்கர் நிலம் நெருப்பெரிச்சலில் உள்ளது. அதன் மதிப்பு ரூ.20-கோடியாகும்.
இந்த நிலத்தை இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் ஆகியோருக்கு சில நாட்களுக்கு முன்பு பாகம் பிரித்து கொடுத்துள்ளார். இந்நிலையில், தனது மகள்கள் மற்றும் மகன் ஆகியோர் தன்னை கண்டு கொள்ளாமல் நடுரோட்டில் விட்டதாகவும், அதனால் தான் உயிர் வாழ முடியாமல் உண்ண உணவின்றி தவிப்பதால் பாகப்பிரிவினை செய்து கிரையம் செய்து வைத்த கிரயத்தை ரத்து செய்து அந்த நிலத்தை மீண்டும் தனக்கு ஒப்படைக்க வேண்டும் என கேட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு புகார் செய்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.