பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆனைமலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு வெள்ளிக்கிழமைகள் அமாவாசை மற்றும் ஆடி மாதங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
இங்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், ஆடி மாதம் முதல் அமாவாசையை முன்னிட்டு, மாசாணி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று இரவு முதலே கோவிலுக்கு பக்தர்களின் வருகை மிகவும் அதிகமாக இருந்தது. கோயில் நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் காலை வரை காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆனைமலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு வெள்ளிக்கிழமைகள் அமாவாசை மற்றும் ஆடி மாதங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
இங்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், ஆடி மாதம் முதல் அமாவாசையை முன்னிட்டு, மாசாணி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று இரவு முதலே கோவிலுக்கு பக்தர்களின் வருகை மிகவும் அதிகமாக இருந்தது. கோயில் நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் காலை வரை காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆனைமலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.