மழைநீர் அரிப்பால் சுவர் இடிந்து விழுந்ததில், யாருக்கும் பாதிப்பு இல்லை. சுவர் இடிந்து கால்வாயில் விழுந்ததில் தண்ணீர் செல்லாமல் துர்நாற்றம் வீசியதால் அருகில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும், தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கோவை: வால்பாறை பகுதியில் மழையால் தடுப்பு சுவர்இடிந்து விழுந்தது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரஎஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக மழை சற்று குறைந்து காணப்படுகின்றது. நேற்று மதியம் முதல் மழை கனமழையாக பெய்து வந்தது.
இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே மரங்கள் விழுந்து காணப்பட்டது. வால்பாறை அண்ணா நகர் பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு ராஜா என்பவரின் வீட்டு அருகே பிரதான கால்வாய் மழைநீர் அரிப்பால் சுவர் இடிந்து விழுந்தது. இதில், யாருக்கும் பாதிப்புஇல்லை. சுவர் இடிந்து கால்வாயில் விழுந்ததால் தண்ணீர் செல்லாமல்துர்நாற்றம் வீசியதுஇதனால் அருகில் உள்ள மக்கள் சிரமப்பட்டனர்.
அப்பகுதியில், உள்ள பத்தாவதுவார்டு உறுப்பினர் காமாட்சி கணேசன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு பொது மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவசர நடவடிக்கையாகத் தடுப்புச் சுவரைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரஎஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக மழை சற்று குறைந்து காணப்படுகின்றது. நேற்று மதியம் முதல் மழை கனமழையாக பெய்து வந்தது.
இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே மரங்கள் விழுந்து காணப்பட்டது. வால்பாறை அண்ணா நகர் பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு ராஜா என்பவரின் வீட்டு அருகே பிரதான கால்வாய் மழைநீர் அரிப்பால் சுவர் இடிந்து விழுந்தது. இதில், யாருக்கும் பாதிப்புஇல்லை. சுவர் இடிந்து கால்வாயில் விழுந்ததால் தண்ணீர் செல்லாமல்துர்நாற்றம் வீசியதுஇதனால் அருகில் உள்ள மக்கள் சிரமப்பட்டனர்.
அப்பகுதியில், உள்ள பத்தாவதுவார்டு உறுப்பினர் காமாட்சி கணேசன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு பொது மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவசர நடவடிக்கையாகத் தடுப்புச் சுவரைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.