பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு கவியருவி ஆறு மாதங்களுக்கு பின்பு இன்று திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
கோவை: பொள்ளாச்சியை அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஆழியாறு அணை, கவியருவி, வால்பாறை, டாப்ஸ்லிப் உள்ளிட்ட பகுதிகள் கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலாப் பணிகள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக பொள்ளாச்சி-வால்பாறை சாலை ஆழியாறு அருகே அமைந்துள்ள கவி அருவியில் ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு ஜனவரி தொடக்கத்தில் இருந்து தண்ணீர் வரத்து மிகவும் குறைவானது. இதனால் இந்த ஜனவரி மாதம் 13-ம்தேதி அருவி மூடப்பட்டது.
கொரோனா மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ச்சியாக கவியருவி மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை குறைந்ததை அடுத்து அருவிக்கு நீர் வரத்து சீராக உள்ளது.

இதனால் 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த கவியருவி இன்று முதல் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் இன்று ஆழியாருக்கு சுற்றுலா வந்த ஏராளமான பொதுமக்கள் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலாப் பணிகள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக பொள்ளாச்சி-வால்பாறை சாலை ஆழியாறு அருகே அமைந்துள்ள கவி அருவியில் ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு ஜனவரி தொடக்கத்தில் இருந்து தண்ணீர் வரத்து மிகவும் குறைவானது. இதனால் இந்த ஜனவரி மாதம் 13-ம்தேதி அருவி மூடப்பட்டது.
கொரோனா மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ச்சியாக கவியருவி மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை குறைந்ததை அடுத்து அருவிக்கு நீர் வரத்து சீராக உள்ளது.
இதனால் 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த கவியருவி இன்று முதல் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் இன்று ஆழியாருக்கு சுற்றுலா வந்த ஏராளமான பொதுமக்கள் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.