பொள்ளாச்சி அருகே ஆழியாறு கவியருவி இன்று திறப்பு, மக்கள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு கவியருவி ஆறு மாதங்களுக்கு பின்பு இன்று திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.


கோவை: பொள்ளாச்சியை அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஆழியாறு அணை, கவியருவி, வால்பாறை, டாப்ஸ்லிப் உள்ளிட்ட பகுதிகள் கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலாப் பணிகள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக பொள்ளாச்சி-வால்பாறை சாலை ஆழியாறு அருகே அமைந்துள்ள கவி அருவியில் ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு ஜனவரி தொடக்கத்தில் இருந்து தண்ணீர் வரத்து மிகவும் குறைவானது. இதனால் இந்த ஜனவரி மாதம் 13-ம்தேதி அருவி மூடப்பட்டது.

கொரோனா மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ச்சியாக கவியருவி மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை குறைந்ததை அடுத்து அருவிக்கு நீர் வரத்து சீராக உள்ளது.



இதனால் 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த கவியருவி இன்று முதல் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் இன்று ஆழியாருக்கு சுற்றுலா வந்த ஏராளமான பொதுமக்கள் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...