காரில் ஏசி ஓடியவாறு இருந்ததால், ஏசி கசிவால் மூச்சுத்திணறி இறந்தாரா..? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.
கோவை: கோவை லாலி ரோட்டில் காரில் அமர்ந்திருந்த நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏசி கசிவால் இறந்தாரா? உட்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மருதமலை சாலை, லாலி ரோடு அருகே ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த பொதுமக்கள் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்த போலீசார், காரின் கதவை திறந்து பார்த்த போது ஒருவர் சீட்டில் அமர்ந்தபடி உயிரற்ற நிலையில் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர், பி.என் புதுரை சேர்ந்த நசீர் அகமது (39) என்பது தெரியவந்தது. மார்க்கெட்டிங் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் மாலத்தீவிற்கு செல்வதாக கூறியுள்ளார். இதனால், அடிக்கடி வெளியே நசீர் அகமது சென்று வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
உயிரற்ற நிலையில் அவரை மீட்ட போது, காரில் ஏசி ஓடியவாறு இருந்ததால், ஏசி கசிவால் மூச்சுத்திணறி இறந்தாரா..? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.