கோவை லாலி ரோட்டில் காரில் அமர்ந்திருந்த நபர் சடலமாக மீட்பு - ஏசி கசிவால் உயிரிழப்பா? போலீசார் விசாரணை

காரில் ஏசி ஓடியவாறு இருந்ததால், ஏசி கசிவால் மூச்சுத்திணறி இறந்தாரா..? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.



கோவை: கோவை லாலி ரோட்டில் காரில் அமர்ந்திருந்த நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏசி கசிவால் இறந்தாரா? உட்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மருதமலை சாலை, லாலி ரோடு அருகே ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த பொதுமக்கள் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.



அங்கு வந்த போலீசார், காரின் கதவை திறந்து பார்த்த போது ஒருவர் சீட்டில் அமர்ந்தபடி உயிரற்ற நிலையில் இருந்தது தெரியவந்தது.



விசாரணையில் அவர், பி.என் புதுரை சேர்ந்த நசீர் அகமது (39) என்பது தெரியவந்தது. மார்க்கெட்டிங் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் மாலத்தீவிற்கு செல்வதாக கூறியுள்ளார். இதனால், அடிக்கடி வெளியே நசீர் அகமது சென்று வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

உயிரற்ற நிலையில் அவரை மீட்ட போது, காரில் ஏசி ஓடியவாறு இருந்ததால், ஏசி கசிவால் மூச்சுத்திணறி இறந்தாரா..? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...