பாராளுமன்ற கூட்டத்தொடரில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை இடை நீக்கம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து பாஜக அரசை கண்டடித்து தொமுச தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். சில நேரங்களில் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில் இன்று 6 திமுக உறுப்பினர்களான சண்முகம், கனிமொழி, என்வீஎன் சோமு, இளங்கோ, கிரிராஜன், கல்யாணசுந்தரம், எம் எம் அப்துல்லா உட்பட 19 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதாக அவையின் துணை தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அதனை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தொமுச அமைப்பினர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் கோவை மாவட்ட செயலாளர் மணி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மக்களின் கோரிக்கைகளை கேட்டால் இடை நீக்கம் செய்வதா என்று கேள்வி எழுப்பி பாஜக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில் இன்று 6 திமுக உறுப்பினர்களான சண்முகம், கனிமொழி, என்வீஎன் சோமு, இளங்கோ, கிரிராஜன், கல்யாணசுந்தரம், எம் எம் அப்துல்லா உட்பட 19 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதாக அவையின் துணை தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அதனை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தொமுச அமைப்பினர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் கோவை மாவட்ட செயலாளர் மணி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மக்களின் கோரிக்கைகளை கேட்டால் இடை நீக்கம் செய்வதா என்று கேள்வி எழுப்பி பாஜக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.