திருப்பூரில் தனக்கு பாத்தியப்பட்ட 25-கோடி மதிப்புள்ள சொத்தை தந்தையே தனது கையெழுத்து இல்லாமல் கிரயம் செய்து கொடுத்ததாக மகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
திருப்பூர்: ரூ.25-கோடி சொத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக கூறி தந்தை மீது மகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மொரட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி தனது கையெழுத்து இல்லாமல் கடந்த 25-ஆம் தேதி கிரயம் மற்றும் செட்டில்மெண்ட் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், பதிவு செய்வது அறிந்த அன்றைய தினமே சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு கொடுத்த நிலையில், சார்பதிவாளர் ரத்து செய்வதாக அறிவித்து இருந்ததாகவும், ஆனால் நேற்று மாலை வரை காத்திருந்து ஆவணங்களை ரத்து செய்யாமல் சார்பதிவாளர் பூபதி தங்களை ஒருமையில் பேசி அனுப்பியதாகவும், எனவே தனது கையெழுத்து இல்லாமல் தனக்கு பாத்தியப்பட்ட சொத்தை தனது தந்தை ஏமாற்றி கிரயம் செய்திருப்பதை ரத்து செய்து வேறு யாரும் அதனை கிரயம் செய்யாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மகேஸ்வரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
திருப்பூர் மாவட்டம் மொரட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி தனது கையெழுத்து இல்லாமல் கடந்த 25-ஆம் தேதி கிரயம் மற்றும் செட்டில்மெண்ட் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், பதிவு செய்வது அறிந்த அன்றைய தினமே சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு கொடுத்த நிலையில், சார்பதிவாளர் ரத்து செய்வதாக அறிவித்து இருந்ததாகவும், ஆனால் நேற்று மாலை வரை காத்திருந்து ஆவணங்களை ரத்து செய்யாமல் சார்பதிவாளர் பூபதி தங்களை ஒருமையில் பேசி அனுப்பியதாகவும், எனவே தனது கையெழுத்து இல்லாமல் தனக்கு பாத்தியப்பட்ட சொத்தை தனது தந்தை ஏமாற்றி கிரயம் செய்திருப்பதை ரத்து செய்து வேறு யாரும் அதனை கிரயம் செய்யாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மகேஸ்வரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.