கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், ஜிஎஸ்டி விலை உயர்வை கண்டித்தும் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், ஜிஎஸ்டி விலை உயர்வை கண்டித்தும் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டச் செயலாளர்கள் தண்டபாணி, சிங்கை சந்துரு, தினகரன், சிவராமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதில், அதிமுக ஆட்சிக்கு வரும் முன் ஒன்று கூறியதாகவும், ஆட்சிக்கு வந்த பிறகு அத்தனையும் தலைகீழாக மாறிவிட்டது என்றும் மத்திய அரசு கேஸ் விலை, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் GST வரி உயர்த்தியதாகவும் கூறினர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்திற்கு அவரது படத்திற்கு மாலை அணிவித்து இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.