7-மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதி..!

7-மாதங்களுக்குப் பிறகு நீர்வீழ்ச்சி திறக்கப்பட்ட தகவல் அறிந்ததும் காலையிலிருந்தே கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டமான திருப்பூர் பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் கூட்டமாக அருவிக்கு வந்தனர்.


கோவை: இன்று முதல் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் கொரோனா ஊரடங்கால் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர் மழை இல்லாததால் நீர்வீழ்ச்சி தண்ணீர் இல்லாமல் வறண்டது.

இதனால், சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருந்தது. தற்போது மழை குறைந்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து மிதமான தண்ணீர் விழுந்து வருகிறது.

இதையடுத்து, இன்று முதல் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். 7-மாதங்களுக்குப் பிறகு நீர்வீழ்ச்சி திறக்கப்பட்ட தகவல் அறிந்ததும் காலையிலிருந்தே கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டமான திருப்பூர் பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் கூட்டமாக அருவிக்கு வந்தனர்.

அவர்கள் அருவியில் குடும்பத்துடன் ஆனந்தமாக உற்சாக குளியல் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சுற்றுலா பயணிகள் வருகையால் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...