பொள்ளாச்சி-கோவை சாலையில் உள்ள தற்காலிக அலுவலக கூட்ட அரங்கில், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை: பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் இன்று பொள்ளாச்சி கோவை ரோட்டில் உள்ள தற்காலிக அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
ஒன்றிய குழு தலைவர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துணைத் தலைவர் சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, ஒன்றிய கவுன்சிலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கொண்டனர்.
கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இந்த கூட்டத்தில் கிராமப் பகுதிகளில் செய்ய வேண்டிய அடிப்படை தேவைகள், குடிநீர், சுகாதாரப்பணிகள் தெருவிளக்கு, சாலை வசதி போன்ற பொது மக்களின் பல்வேறு கோரிக்கைகளை குறித்து கவுன்சிலர்கள் முறையிட்டனர். கவுன்சிலர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.