குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவுப் பணியை தோட்டக் கலைத்துறை இணை இயக்குநர் சிபிலா மேரி தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் மலர் கண்காட்சி நடைபெறும்.
இதற்காக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவுப் பணியை தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் சிபிலா மேரி தொடங்கிவைத்தார். தொடர்ந்து மலர்கள் நடப்படும் இடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இங்கு பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி, பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 75 வகையான மலா் செடி ரகங்கள் நடப்பட உள்ளன.
இதற்காக அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, நெதா்லாந்து போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட டேலியா, சால்வியா, பிளாக்ஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம், ஜெராேனியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், ஸ்வீட்வில்லியம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன,
விதைகளின் மூலம் உருவாக்கப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் மலர் நாற்றுகள் பூங்காவில் நடவு செய்யும் பணிகள் தொடங்கி நடக்கிறது. இதில் தோட்டக்கலை உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இதற்காக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவுப் பணியை தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் சிபிலா மேரி தொடங்கிவைத்தார். தொடர்ந்து மலர்கள் நடப்படும் இடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இங்கு பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி, பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 75 வகையான மலா் செடி ரகங்கள் நடப்பட உள்ளன.
இதற்காக அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, நெதா்லாந்து போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட டேலியா, சால்வியா, பிளாக்ஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம், ஜெராேனியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், ஸ்வீட்வில்லியம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன,
விதைகளின் மூலம் உருவாக்கப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் மலர் நாற்றுகள் பூங்காவில் நடவு செய்யும் பணிகள் தொடங்கி நடக்கிறது. இதில் தோட்டக்கலை உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.