கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ஆற்றங்கரையில் 'ஆடி அமாவாசை' வழிபாட்டுக்கு தடை..!

நொய்யல் ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் நீர் வரத்து அதிகரிக்கலாம் என்ற அச்சுறுத்தல் உள்ளது. மேலும், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நொய்யல் ஆற்றங்கரையில் பக்தர்கள் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது.


கோவை: கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் ஆறு, குளம், ஏரி, கடல் போன்ற நீர் நிலைகளில் புனித நீராடி முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்வது வழக்கம். கோவையில் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை தினத்தில் பக்தர்கள் திரண்டு முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுப்பார்கள்.

கடந்த 2-ஆண்டுகளாக கொரோனா பரவல் தடை காரணமாக நொய்யல் ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இருந்தாலும் பக்தர்கள் தடையை மீறி திரண்டு திதி கொடுத்தனர்.

இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை நாளை மறுநாள் (28-ந் தேதி) வருகிறது. அன்று பக்தர்கள் ஏராளமானோர் பேரூர் நொய்யல் ஆற்றங்கரைக்கு சென்று முன்னோர்களை வழிபட திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் படித்துறையில் ஆடி அமாவாசையில் பக்தர்கள் கூட தடை விதித்து கோவில் உதவி ஆணையாளர் விமலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர் வரத்து இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் நீர் வரத்து அதிகரிக்கலாம் என்ற அச்சுறுத்தல் உள்ளது. மேலும், கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நொய்யல் ஆற்றங்கரையில் பக்தர்கள் கூட அனுமதிக்க வேண்டாம் என பேரூர் வருவாய்த்துறையினரும், பொதுப்பணித்துறை யினரும் கோவில் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி கடிதம் அனுப்பி உள்ளனர்.

அந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு ஆடி அமாவாசை தினத்தில் நொய்யல் ஆற்றங்கரையில் புனித நீராடவோ, தர்ப்பணம் கொடுக்கவோ தடை விதிக்கப்படுவதாக உதவி ஆணையாளர் விமலா தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக தர்ப்பணம் கொடுக்க அனுமதி இல்லாததால் இந்த ஆண்டிலாவது ஆடி அமாவாசை அன்று திதி கொடுக்கலாம் என்று நினைத்து இருந்த பக்தர்கள் தடை காரணமாக அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே தடையை நீக்கி அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...