இது வாக்கிங் டிராக்கா? ரேசிங் டிராக்கா..? ரேஸ்கோர்ஸ் நடை பயிற்சியாளர்கள் புகார் - வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை..!

ரேஸ்கோர்ஸ் ரவுண்டானா நடைபாதையில் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குபவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக நடை பயிற்சியாளர்கள் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சாலை வழியாக வாகனங்களை இயக்க போதுமான இட வசதி உள்ள போதும், ரவுண்டானா பகுதியில் உள்ள நடைப்பயிற்சி நடைபாதையில் வாகனங்களை இயக்கபடுவதாக, புகார் எழுந்துள்ளது.

இது வாக்கிங் டிராக்கா? இல்லை ரேசிங் டிராக்கா..?

பச்சை பசேல் என்ற சூழலில் நடைப்பயிற்சி மேற்கொள்ள சிறந்த இடம் என்றால் கோவை வாசிகளின் நினைவுக்கு உடனே வருவது ரேஸ் கோர்ஸ் பகுதி தான். தினமும், நூற்றுக்கணக்கான ஆண், பெண், மாணவ மாணவியர், விளையாட்டு வீரர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ரேஸ் கோர்ஸ் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

தற்போது, ரேஸ்கோர்ஸ் பகுதி முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருவதால், ஏற்கனவே நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் அசவுகரியத்தை சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில், நடைப்பாதையில் வாகனங்களை இயக்குபவர்களால், நிம்மதியாக நடைப்பயிற்சி மேற்கொள்ள முடிவதில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

இது வாக்கிங் டிராக்கா? இல்லை ரேசிங் டிராக்கா..? என்று கேட்கும் அளவிற்கு இளைஞர்கள் புல்லட், கே.டி.எம், யமஹா பஜாஜ் சுசுகி போன்ற அதிக சத்தம் எழுப்பும். ஸ்போர்ட்ஸ் பைக்களை நடைபயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் இயக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, ரேஸ்கோர்ஸ் ரவுண்டானா பகுதியில் சாரதாம்பாள் கோவில் முன்பு துவங்கி காஸ்மோ கிளப் நுழைவாயில் வரை உள்ள நடைபாதையில் இந்த விதிமீறல் அதிகம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

இவ்வாறு போக்குவரத்து விதிக்கு புறம்பாக செயல்படும் வாகன ஓட்டிகள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதி வேகத்தில் வாகனங்களை இயக்குவதால் பெரும் விபத்து நடக்க வாய்ப்புள்ளதாக, நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

புகார் குறித்து பேசிய, கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர், மதிவாணன்: நடைபாதை என்பது பொதுமக்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இடம். அந்த இடத்தில் விதி மீறி அதிவேகத்தில் வாகனங்களை இயக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...