கோவையில் இரயில் நிலையம் முற்றுகை- ம.தி.மு.க.வினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு


பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை கண்டித்து, கோவையில் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசின் ஒப்பதல் இன்றி, கட்டுமான பணிகள் நடைபெறுவதை தடுத்த நிறுத்து வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பவானி ஆற்றில் தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை கண்டித்தும், கட்டுமான பணிகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கோவையில் ம.தி.மு.க வினர் கோவை இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது தடுப்புகளை மீறி இரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வறட்சியினால் பாசனம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நிலையில், பவானி மற்றும் அமராவதி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

மேலும் தடுப்பணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்தவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 186 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக இரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...