முறையாக சாலை அமைத்து தரக்கோரி கோவை துடியலூர் அருகே திடீர் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு..!

40-அடி சாலை அமைக்க வேண்டிய இடத்தில் வெறும் 12-அடி மட்டுமே சாலை அமைக்கப்படுவதை கண்டித்து, அகில பாரத இந்து மகா சபா தேசிய ஒருங்கிணைப்பாளரும், மாநில இளைஞரணி தலைவருமான சுபாஷ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: முறையாக சாலை அமைத்து தரக்கோரி கோவை துடியலூர் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை துடியலூர் அருகே பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட பன்னிமடை- திப்பனூர் சாலை உள்ளது. இந்த பகுதியில் 4 வருடங்களாக சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த நிலையில் 40 அடி சாலை அமைக்க வேண்டிய இடத்தில் வெறும் 12 அடி மட்டுமே சாலை அமைப்பதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்ததும் அகில பாரத இந்து மகா சபா தேசிய ஒருங்கிணைப்பாளரும், மாநில இளைஞரணி தலைவருமான சுபாஷ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தடாகம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து தடாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் 40 அடிக்கு சாலை அமைக்கலாம். ஆனால் வெறும் 12 அடிக்கே அமைக்கின்றனர்.

இதனால் மற்ற வாகனங்களுக்கு வழிவிடும் வகையில் சாலையை விட்டு இறங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே 16 அடிக்காவது சாலையை அமைக்க வேண்டும் என்றனர். இதையடுத்து அரசு அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...