கோவை மாநகர காவல் ஆணையர் பதவி விலக வேண்டும்: அனைத்து முற்போக்கு சனநாயக இயக்கங்களின் கூட்டியக்கம் வலியுறுத்தல்


கோவையில் ஜல்லிக்கட்டு வேண்டி வ.உ.சி.மைதானதில் நடைபெற்ற போரட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், சில அமைப்புகள் மற்றும் கட்சியின் பெயரை சொல்லி, அவர்களுடனான தொடர்பை மாணவர்கள் முறித்துகொள்ள வேண்டும் என்றும், தோழர் என்று கூறிக்கொண்டு மாணவர்களிடம் பேசுபவர்களிடமும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறினார். இதற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இதை தொடர்ந்து,  நாம் தமிழர், புரட்சிகர மாணவர் முன்னணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மற்றும் இந்திய இசுலாமிய மாணவர் அமைப்பு போன்ற 22 அமைப்புகள், அனைத்து முற்போக்கு சனநாயக இயக்கங்களின் கூட்டியக்கமாக ஒன்றினைந்து இன்று கோவை பிரஸ்கிளப்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினர்.



 

இதில் கலந்து கொண்ட மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் மாநில துணை செயலாளர் பொன்சந்திரன் கூறியதாவது :-

கோவையில் அமைதியாக நடைபெற்ற போரட்டத்தை சீர்குலைத்ததே காவல்துறைதான்.

ஒவ்வொரு இயக்கத்தினரையும் குறிவைத்து தாக்கியிருக்கிறது கோவை மாநகர காவல் துறை. மேலும், உணர்வுப்பூர்வமாக போராடிய சில அமைப்புகளை தேச துரோகிகள் என முத்திரை குத்த பார்க்கின்றனர்.

'தோழர்' என்பது உன்னதமான வார்த்தை. பகத்சிங் முதல் சிங்காரவேலன் வரை ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்திய வார்த்தை. இப்படியான வார்த்தையை பயங்கரவாத வார்த்தையாக சித்தரித்துள்ளனர்  'தோழர்' என்று கூறுபவர்களுடனான பேச்சுவார்த்தையை முறித்துக்கொள்ளுங்கள் மாணவர்களே என்று காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியுள்ளார். இது அரசியல் சாசனத்திற்கு எதிரனது. போலீசார் கூறிய இந்த அவச்சொல்லை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் இந்த கூட்டியக்கத்தின் சார்ப்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.

காவல் துறை அராஜகத்தை மறைத்துக்கொள்வதற்கான முயற்சியே இது.

அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசிய காவல் ஆணையர் அமல்ராஜை இடை நீக்கம் செய்ய வேண்டும்.

மேலும், இந்த பிரச்சனையில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்வதுடன் பாதிக்கபட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

இந்த கோரிக்கையின் மிது நடவடிக்கை இல்லை என்றால் தொடர்ந்து தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...