கல்லூரி மாணவியை புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கோவையை சேர்ந்த நபர் மீது வழக்குப்பதிவு

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 24 வயது கல்லூரி மாணவி ஒருவர், கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தன்னை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வருவதாக, கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


கோவை: கோவையை சேர்ந்த ஒருவர் தன்னை ஆபாச படம் எடுத்து மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக, கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில், கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் ராஜ்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 24 வயது கல்லூரி மாணவி, கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல்.நிலையத்தில், பாலியல் துன்புறுத்தல் குறித்து ஒரு புகார் மனு அளித்துள்ளார்

அதில், தான் மும்பையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருவதாகவும், கடந்த 2020-ல் சென்னையில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த போது, கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், ராஜ்குமார் தனக்கு, ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளதை

மறைத்து, இந்த பெண்ணிடம் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், அவரை திருமணம் செய்த விருப்பம் இல்லாததால் அந்த பெண் மறுத்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் அந்த பெண்ணுக்கு தெரியாமல் எடுத்து வைத்திருந்த ஆபாச படத்தை காட்டி, அவர் சொல்லும் இடத்திற்கு வரும்படி மிரட்டியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுத்ததால், அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

இதனால், பயந்து போன அந்த பெண் சென்னையில் ராஜ்குமார் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து ராஜ்குமார் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண், குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், குன்றத்தூரில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து, அங்கும் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அப்போது தன்னை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அடிக்கடி மிரட்டி பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், ராஜ்குமாரின் வீடு கோவையில் இருப்பதை அறிந்த அந்த பெண், அந்த படங்களை பெற்றுக்கொள்வதற்காக கோவைக்கு வந்துள்ளார். அப்போது, தன்னை ராஜ்குமார் அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா அருகே வர சொல்லியதாகவும், அங்கு சென்று புகைப்படங்களை கேட்ட போது, தர மறுத்த ராஜ்குமார் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக, புகார் மனுவில் அப்பெண் தெரிவித்துள்ளார்.

அந்த பெண் அளித்த புகாரின் பேரில், கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ராஜ்குமார் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...