மத்திய மண்டலத்தில் தூய்மை மற்றும்‌ சுகாதாரபணிகள்‌ கோவை மேயர் நேரில் ஆய்வு

மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.63க்குட்பட்ட இராமநாதபுரம்‌ மாநகராட்சி ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பள்ளி வளாகத்திலுள்ள செடி, கொடிகளை உடனடியாக அகற்றி தூய்மைப்படுத்திடவும்‌, பழுதடைந்த கட்டடங்களை பராமரிக்க வேண்டுமெனவும்‌ அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.



கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மத்திய மண்டல பகுதிகளில்‌ தூய்மை மற்றும்‌ சுகாதாரபணிகள்‌ குறித்து மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.63க்குட்பட்ட இராமநாதபுரம்‌ மாநகராட்சி ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ இன்று நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பள்ளி வளாகத்திலுள்ள செடி, கொடிகளை உடனடியாக அகற்றி தூய்மைப்படுத்திடவும்‌, பழுதடைந்த கட்டடங்களை பராமரிக்க வேண்டுமெனவும்‌ அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்,



பின்னர்‌, இராமநாதபுரம்‌, பெருமாள்‌ கோயில்‌ பிரதான வீதியில்‌ உள்ள அரசு இடத்தில்‌ தனியார்‌ கால்நடைகளை வளா்ப்பதையும்‌, குப்பைகள்‌ கொட்டியிருப்பதையும்‌ பார்வையிட்டு கால்நடை வளர்ப்பவர்களுக்கு உரிய நோட்டீஸ்‌ வழங்கவும்‌,



அப்பகுதியிலுள்ள குப்பைகளை உடனடியாக சுத்தம்‌ செய்திட சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்‌.



அதனைத்தொடர்ந்து, இராமலிங்க ஜோதி நகரில்‌ உள்ள மழைநீர் வடிகாலில்‌ செடி, கொடிகள்‌ மற்றும்‌ குப்பைகளை அகற்றி தூர்வாரி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளருக்கு அறிவுறுத்தியதைத்‌ தொடாந்து,



அப்பகுதியிலுள்ள மாநகராட்சி இடத்தில்‌ தனியார்‌ வாகனங்கள்‌ நிறுத்தப்பட்டிருந்ததால்‌, தனியார்‌ வாகனங்கள்‌ நிறுத்தாதவாறு இடத்தை புனரமைத்து, மேம்படுத்தி அப்பகுதியில்‌ மாநகராட்சி விளையாட்டு மைதானம்‌ அமைத்திட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்,



மேலும்‌, பெருமாள்‌ கோயில்‌ வீதியில் உள்ள நியாயவிலைக்கடையில்‌ பொருட்களின்‌ தரம்‌ குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களின்‌ குறைகளை கேட்டறிந்தார்‌.

இந்த ஆய்வின்போது, துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, மத்திய மண்டல தலைவர்‌ மீனாலோகு, பணிகள்‌ குழு தலைவர்‌ சாந்தி முருகன்‌, உதவி ஆணையாளர்‌ சங்கா, உதவி செயற்பொறியாளர்‌ புவனேஸ்வரி, உதவி பொறியாளர்‌ கணேசன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலாகள்‌ பலர் உடனிருந்தனர்‌.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...