கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனை - வடமாநில நபர் கைது; 40- கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!

கஞ்சாவை பொட்டலமாக விற்றால் காவல்துறையிடம் வசமாக மாட்டிக் கொள்வோம் என்பதால், சாக்லேட் வடிவில் ஒரு கஞ்சா சாக்லேட், ரூ.100 என விற்ற இளைஞரை போலீசார் கைது செய்து மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நகரில் ஏராளமான கல்லூரிகள் உள்ளதால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா, போதை மாத்திரை விற்பனை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து, கஞ்சா கடத்தலில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டாலும், கஞ்சா புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனம்.

கஞ்சாவை நேரடியாக விற்றால் பிடிபடுவதாக கருதும் கடத்தல் நபர்கள், கஞ்சாவை வித்தியாசமான முறையில் பேக்கிங் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி, கோவையில் சாக்லேட் வடிவில் கஞ்சா விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் குறிப்பாக பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கஞ்சா சாக்லேட், ரூ.100 என விற்று வந்த நபரை ஆர்.எஸ்.புரம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ள நிலையில், இவர்கள் நெட்வொர்க்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக, அந்த இடத்துக்கு, உதவி கமிஷனர்கள் மணிகண்டன், வேல்முருகன், இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி மற்றும் தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது கஞ்சா சாக்லேட்களை விற்று வந்த சேத்தன் (30) என்பவரை கையும் களவுமாக பிடித்தனர்.



அவரிடம் இருந்து 40 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது.



விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், கோவை ரங்கே கவுண்டர் வீதியில் டீக்கடை மற்றும் கோவில்பாளையம் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இந்த கஞ்சா சாக்லேட் விற்பனையில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கஞ்சா சாக்லேட்டை உட்கொள்பவர்கள், போதையால் பாதிக்கப்படுவதுடன், சிறுநீரக கோளாறு, கல்லீரல் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனையை முழுவதும் கட்டுப்படுத்த சோதனையை மேலும் தீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...