கோவை பொள்ளாச்சி புதிய திட்ட சாலையில் அத்து மீறி நிறுத்தப்படும் வாகனங்கள்- பொதுமக்கள் அவதி..!

அத்து மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாகன நிறுத்த வசதி இல்லாத வணிக வளாகங்கள் மீதும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி புதிய திட்ட சாலையில் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி நகரின் முக்கிய சாலைகளில் ஒன்று புதிய திட்ட சாலையில் வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனைகள் அதிகம் உள்ளன. மேலும் இது பொள்ளாச்சி பல்லடம் சாலையில் இணைப்பு சாலையாகவும் உள்ளது.

இதனால் இங்கு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன போக்குவரத்து அதிக அளவில் இருப்பது வழக்கம். இந்நிலையில் சாலையின், இருபுறங்களிலும் நோ பார்க்கிங் பகுதிகளில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அத்துமீறி நிறுத்தப்படுகின்றன.



இதனால், மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வரும் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து காவலர்கள் அவ்வப்போது அத்துமீறும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து வந்த போதிலும், இது தொடர்கதையாகி வருகிறது.

குறிப்பாக வணிக வளாகங்களில் வாகனங்கள் நிறுத்த உரிய இட வசதிகள் ஏற்படுத்தாததால், இது போன்ற நெருக்கடி ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நகரில் அத்து மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாகன நிறுத்த வசதி இல்லாத வணிக வளாகங்கள் மீதும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...