கோவை: கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சியில் உள்ள நியாய விலைக் கடையில் பணம் கேட்டு தகராறு செய்த நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் மகன் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சியில் உள்ள நியாய விலைக் கடையில் பணம் கேட்டு தகராறு செய்த நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் மகன் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள 7வது வார்டுக்கு உட்பட்ட கோட்டம்பட்டியில் முன்னாள் நகர் மன்ற உறுப்பினராக இருந்த ஜெகநாதனின் மகன் கிருஷ்ணகுமார். இவர் கோட்டம்பட்டியில் உள்ள நியாய விலைக் கடைக்குச் சென்று அங்கிருந்த ஊழியர் பாலகிருஷ்ணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால், கடை ஊழியர் பணம் தர மறுத்துள்ளார்.

இதையடுத்து கிருஷ்ணகுமார் அவரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைதொடர்ந்து எழுந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகாலிங்கபுரம் போலீசார், கிருஷ்ண குமாரை கைது செய்தனர்.
பின்னர் போலீசார் அவரை சிறையில் அடைக்க நீதிபதி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, நீதிபதி வீட்டில் காவல்துறை பாதுகாப்போடு நின்று கொண்டிருந்த கிருஷ்ணகுமார் திடீரென போலீசாரை தள்ளி விட்டு தப்பியோடினார். இதையடுத்து அவரை பின்தொடர்ந்து மடக்கிப்பிடித்து கைது செய்த போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.