இலவச வீட்டு மனை பட்டாவை உடனடியாக வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

இலவச வீட்டு மனை பட்டாவை உடனடியாக வழங்க கோரி மதுக்கரையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: இலவச வீட்டு மனை பட்டாவை உடனடியாக வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை மதுக்கரையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் மதுக்கரை பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் வசித்து வருவதாகவும், கடந்த 20 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்து இருந்ததாகவும், கடந்த 2015-ம் ஆண்டு மாவட்ட ஆட்சி தலைவரின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் நேரில் விசாரணை மேற்கொண்டு ஏழை எளிய மக்களின் குடும்பங்களின் நிலை அறிந்து தேர்வு செய்து இலவச வீட்டுமனை பட்டாக்களை தயார் செய்து போட்டு வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சில தனி நபர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க கூடாது என கடந்த ஆட்சியில் தடுத்து வந்தனர். கடந்த ஆறு ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் போட்டு வைக்கப்பட்டும் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் போட்டு வைக்கப்பட்டு தயாராக உள்ள பட்டாக்களை உடனே வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...