இலவச வீட்டு மனை பட்டாவை உடனடியாக வழங்க கோரி மதுக்கரையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை: இலவச வீட்டு மனை பட்டாவை உடனடியாக வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மதுக்கரையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் மதுக்கரை பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் வசித்து வருவதாகவும், கடந்த 20 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்து இருந்ததாகவும், கடந்த 2015-ம் ஆண்டு மாவட்ட ஆட்சி தலைவரின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் நேரில் விசாரணை மேற்கொண்டு ஏழை எளிய மக்களின் குடும்பங்களின் நிலை அறிந்து தேர்வு செய்து இலவச வீட்டுமனை பட்டாக்களை தயார் செய்து போட்டு வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு சில தனி நபர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க கூடாது என கடந்த ஆட்சியில் தடுத்து வந்தனர். கடந்த ஆறு ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் போட்டு வைக்கப்பட்டும் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் போட்டு வைக்கப்பட்டு தயாராக உள்ள பட்டாக்களை உடனே வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
கோவை மதுக்கரையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் மதுக்கரை பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் வசித்து வருவதாகவும், கடந்த 20 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்து இருந்ததாகவும், கடந்த 2015-ம் ஆண்டு மாவட்ட ஆட்சி தலைவரின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் நேரில் விசாரணை மேற்கொண்டு ஏழை எளிய மக்களின் குடும்பங்களின் நிலை அறிந்து தேர்வு செய்து இலவச வீட்டுமனை பட்டாக்களை தயார் செய்து போட்டு வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு சில தனி நபர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க கூடாது என கடந்த ஆட்சியில் தடுத்து வந்தனர். கடந்த ஆறு ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் போட்டு வைக்கப்பட்டும் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் போட்டு வைக்கப்பட்டு தயாராக உள்ள பட்டாக்களை உடனே வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.