சிறுமுகை வனச்சரகத்தில் “ஹெர்பஸ் வைரஸ்” தாக்குதலில் குட்டியானை உயிரிழந்திருக்கலாம் – கால்நடை மருத்துவர்கள் தகவல்.

இறந்த குட்டியானையின் உடல் பாகங்கள் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஐ.ஆர்.ஐ ஆய்வகத்திற்கு அனுப்ப உள்ளதாகவும்,, ஆய்வு முடிவுகள் வந்த பிறகே யானை உயிரிழப்பிற்கான முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: சிறுமுகை வனச்சரகம் ஓடத்துறை காப்புக் காட்டில் இறந்த நிலையில் சுமார் 2 மாத ஆண் யானை குட்டி சடலமாக கண்டறியப்பட்டது. இந்நிலையில், யானையின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.



முதல் கட்ட ஆய்வில், குட்டி யானையின் உடலில் காயங்களோ, குண்டு பாய்ந்த தடயம் மற்றும் அருகே மின்சார கம்பிகள் ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் இறந்த குட்டியானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து, மருத்துவர் சுகுமார் கூறும் போது, "குட்டியானை இறந்து சுமார் 36 மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கலாம். மேலும், குட்டியானையின் குடல் பகுதிகளில் உணவு ஏதும் இல்லை. இருப்பினும்உள் உறுப்புகளில் இரத்த கசிவு இருந்துள்ளது. மேலும்,குட்டி யானையின் இதயம், கல்லீரல் கூல் போன்ற வடிவில் இருந்தது.

யானை மிகவும் குறைவான வயது என்பதால் இதற்கு ஹெர்பஸ் என்ற வைரஸ் தாக்குதல் இருந்திருக்கலாம், இந்த சந்தேகத்தின் அடிப்படையில், நுரையீரல், இருதயம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும், எலும்பு மஞ்சையும் சேகரிக்கப்பட்டு ஐஸ் பேக்கில் வைத்து உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஐ.ஆர்.ஐ ஆய்வகத்திற்கு அனுப்ப உள்ளதாகவும், ஆய்வு முடிவுகள் வந்த பிறகே யானை உயிரிழப்பிற்கான முழுமையான விவரங்கள் தெரியவரும்",என தெரிவித்தார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...